திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1775 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிர பேஷரான இவர் ஓர் அபலை இறே -என்று பாராதே நமக்கு ஸ்நேஹிப்பாரைப் போலே சலத்தைப் பண்ணினார் ஆயிற்று) 8 | அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே –9-3-8 | பதவுரை Show / Hideஅலமும் ஆழிபடையும் உடையார், Alamum Aazhipadaiyum Udaiyaar - காலப்பையும சக்கரமுமாகிற திவ்யாயுதங்களை யுடையரான பெருமான் (- (அவர் அப்படியிருந்தாலும்) (நெஞ்சே!) நாம் தொழுதும் எழு) நமக்கு, Namakku - நம் விஷயத்திலே அன்பர் ஆய், Anbar Aay - அன்புடையவர் போன்றவராய் சலம் அது ஆகி, Salam Adhu Aagi - கபடத்தையுடையவராகி தகவு ஒன்று இலர், Thagavu Ondru Ilan - சிறிதும் இரக்கமில்லாதவரா யிருக்கின்றார் உலவு கால், Ulavuk Kaal - உலாகின்ற தென்றல் காற்றையுடைய நல் கழி, Nal Kazhi - நல்ல கழிகளிலே ஓங்கு தண் பை பொழிலூடு, Ongu Than Pai Pozhiloodu - உயர்ந்து குளிர்ந்து பரந்த சோலைகளிடத்தே புலவு கானல் களிவண்டு இனம், Pulavu Kaanal Kalivandu Inam - புலால் நாற்றம் நாறுகின்ற கடற்கரைச் சோலைகளிலுள்ள களிவண்டுகளின் கூட்டமானது இசை பாடு, Isai Paadu - இசைபாடப்பெற்ற புல்வாணி, Pulvaani - திருப்புல்லாணியை |