திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1776 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1776பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செய்யக் கடவது அல்லாதன எல்லாம் செய்து பெறக் கடவோம் புருஷார்த்தம் -ஸ்வ யத்ன சாத்தியம் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம்) 9
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில் ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப் போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே –9-3-9
பதவுரை Show / Hide
மாதே, Maadhe - தோழிப்பெண்ணே,! (- (நாம்))
நமக்கே நலம் ஆதலில், Namakke Nalam Aadhalin - நமக்கே புருஷார்த்தமாதலால்
குளித்து, Kulithu - ஸ்நாநம்பண்ணி
நாமம் ஓதி, Naamam Oadhi - (பிரானுடைய) திருநாமங்களை ஓதி
ஒளி மா மலர்பதம், Oli Maa Malarpadham - ஒளிபொருந்திய சிறந்த திருவடிவத் தாமரைகளை
உச்சிதன்னால், Uchithannal - தலையினால்
நாளும் பணிவோம், Naalum Panivom - நாள்தோறும் தொழக் கடவோம்;
ஆது தாரான் எனிலும், Aadhu Tharaan Enilum - (அப்பிரான் ஒன்றும் தரமாட்டானேலும்
தரும், Tharum - தந்திடுவன்;
அன்றியும், Andriyum - தரினும் தாராதொழியினும்
அன்பராய், Anbarai - பக்தராய்
அவன் மன்னு புல்வாணியே, Avan Mannu Pulvaaniye - அவன் பொருந்தி வாழும் திருப்புல்லாணியையே
தொழுதும், Thozhudum - தொழுவோம்,
போது, Podhu - வா.