திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1776 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செய்யக் கடவது அல்லாதன எல்லாம் செய்து பெறக் கடவோம் புருஷார்த்தம் -ஸ்வ யத்ன சாத்தியம் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம்) 9 | ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே –9-3-9 | பதவுரை Show / Hideமாதே, Maadhe - தோழிப்பெண்ணே,! (- (நாம்)) நமக்கே நலம் ஆதலில், Namakke Nalam Aadhalin - நமக்கே புருஷார்த்தமாதலால் குளித்து, Kulithu - ஸ்நாநம்பண்ணி நாமம் ஓதி, Naamam Oadhi - (பிரானுடைய) திருநாமங்களை ஓதி ஒளி மா மலர்பதம், Oli Maa Malarpadham - ஒளிபொருந்திய சிறந்த திருவடிவத் தாமரைகளை உச்சிதன்னால், Uchithannal - தலையினால் நாளும் பணிவோம், Naalum Panivom - நாள்தோறும் தொழக் கடவோம்; ஆது தாரான் எனிலும், Aadhu Tharaan Enilum - (அப்பிரான் ஒன்றும் தரமாட்டானேலும் தரும், Tharum - தந்திடுவன்; அன்றியும், Andriyum - தரினும் தாராதொழியினும் அன்பராய், Anbarai - பக்தராய் அவன் மன்னு புல்வாணியே, Avan Mannu Pulvaaniye - அவன் பொருந்தி வாழும் திருப்புல்லாணியையே தொழுதும், Thozhudum - தொழுவோம், போது, Podhu - வா. |