திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1782 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய பந்துக்கள் அடைய திரண்டு நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதே அவன் வார்த்தை கேட்டாய் இறே- நாங்கள் சொன்னதுவே மெய்யாய்-அவன் சொன்ன வார்த்தை பொய்யான படி கண்டாயே – இனி நாங்கள் சொன்னத்தை கேட்க வல்லையே என்ன அப்படியே செய்கிறோம் -அவன் பின் போன நெஞ்சை மீட்டால் -என்கிறாள்) 5 | வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்
புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே –9-4-5 | பதவுரை Show / Hideஇலங்கை, Ilankai - லங்காபுரியானது மலங்க, Malanga - நலங்கியழியும்படியாக வில்லால், Villal - சார்ங்கத்தாலே சரம், Saram - அம்புகளை துரந்த, Durandha - பொழிந்த வல்லாளன் பின், Vallalan Pin - மஹாவீரரான பெருமாள் பின்னே போன, Pona - சென்ற நெஞ்சம், Nenjam - மனமானது வரும் அளவும், Varum Alavum - மீண்டுவருகிறவரையில், எல்லாரும், Ellarum - தோழிமார்தாய்மார் முதலிய அனைவரும் என் தன்னை, En Thannai - என்னை ஏசிலும், Esilum - பழித்தாலும் பேசிடினும், Pesidinum - (கண்டித்துச்) சொன்னாலும் (ஒன்றுக்கும் மீளாதபடி) புல்லாணி எம்பெருமான், Pullani Emperuman - திருப்புல்லாணி யெம்பெருமானுடைய பொய், Poi - பொய்யுரைகளை கேட்டு இருந்தேன், Kettu Irundhen - நம்பித்தரித்திருக்கின்றேன். |