திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1782 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1782பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய பந்துக்கள் அடைய திரண்டு நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதே அவன் வார்த்தை கேட்டாய் இறே- நாங்கள் சொன்னதுவே மெய்யாய்-அவன் சொன்ன வார்த்தை பொய்யான படி கண்டாயே – இனி நாங்கள் சொன்னத்தை கேட்க வல்லையே என்ன அப்படியே செய்கிறோம் -அவன் பின் போன நெஞ்சை மீட்டால் -என்கிறாள்) 5
வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும் எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும் புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே –9-4-5
பதவுரை Show / Hide
இலங்கை, Ilankai - லங்காபுரியானது
மலங்க, Malanga - நலங்கியழியும்படியாக
வில்லால், Villal - சார்ங்கத்தாலே
சரம், Saram - அம்புகளை
துரந்த, Durandha - பொழிந்த
வல்லாளன் பின், Vallalan Pin - மஹாவீரரான பெருமாள் பின்னே
போன, Pona - சென்ற
நெஞ்சம், Nenjam - மனமானது
வரும் அளவும், Varum Alavum - மீண்டுவருகிறவரையில்,
எல்லாரும், Ellarum - தோழிமார்தாய்மார் முதலிய அனைவரும்
என் தன்னை, En Thannai - என்னை
ஏசிலும், Esilum - பழித்தாலும்
பேசிடினும், Pesidinum - (கண்டித்துச்) சொன்னாலும் (ஒன்றுக்கும் மீளாதபடி)
புல்லாணி எம்பெருமான், Pullani Emperuman - திருப்புல்லாணி யெம்பெருமானுடைய
பொய், Poi - பொய்யுரைகளை
கேட்டு இருந்தேன், Kettu Irundhen - நம்பித்தரித்திருக்கின்றேன்.