திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1783 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு ஆஸ்வாசத்தை பண்ணக் கடவனானவன் போய்க் கொடு நின்றான்-நலிவார் பெருத்திரா நின்றது அனுபவிக்கலான நிலத்திலே போய்ப் புகப் பெற்றிலோம்-இங்குள்ளவையும் நம்மை விட்டுப் போகா நின்றது -என்கிறாள்) 6 | சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால்
செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன்
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே –9-4-6 | பதவுரை Show / Hideசுழன்று இலங்கு வெம் கதிரோன், Suzhandru Ilangu Vem Kathiron - (மேருமலையைச்) சுற்றி வந்துகொண்டு பிரகாசிக்கின்ற ஸூரியன் தேரோடும் போய் மறைந்தான், Therodum Poi Marainthaan - தனது தேரோடே சென்று அஸ்தமித்தான்; அம்சுடரோன் தான், Amsudharon Thaan - அழகிய கிரணங்களையுடைய சந்திரனோ வென்றால் அழன்று கொடிது ஆகி, Azhandru Kodithu Aagi - மிகவும் தீக்ஷ்ணனாய்க் கொண்டு அடும், Adum - தஹிக்கின்றான், ஆல், Aal - அந்தோ! செழு, Sezhu - செழுமைதங்கிய தடம், Thadam - தடங்களாலும் பூ சோலை, Poo Cholai - பூஞ்சோலைகளாலும் சூழ், Sool - சூழப்பட்ட புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை கைதொழுதேன், Kaithozhuthen - கைதொழுத யான் என்தன் எழில்நிற மும், Enthan Ezhilnira Mum - எனது அழகிய நிறத்தையும் சங்கும், Sangum - வளைகளையும் இழந்திருந்தேன், Izhandhirundhen - இழந்து விட்டேன் |