திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1783 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1783பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு ஆஸ்வாசத்தை பண்ணக் கடவனானவன் போய்க் கொடு நின்றான்-நலிவார் பெருத்திரா நின்றது அனுபவிக்கலான நிலத்திலே போய்ப் புகப் பெற்றிலோம்-இங்குள்ளவையும் நம்மை விட்டுப் போகா நின்றது -என்கிறாள்) 6
சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான் அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால் செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன் இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே –9-4-6
பதவுரை Show / Hide
சுழன்று இலங்கு வெம் கதிரோன், Suzhandru Ilangu Vem Kathiron - (மேருமலையைச்) சுற்றி வந்துகொண்டு பிரகாசிக்கின்ற ஸூரியன்
தேரோடும் போய் மறைந்தான், Therodum Poi Marainthaan - தனது தேரோடே சென்று அஸ்தமித்தான்;
அம்சுடரோன் தான், Amsudharon Thaan - அழகிய கிரணங்களையுடைய சந்திரனோ வென்றால்
அழன்று கொடிது ஆகி, Azhandru Kodithu Aagi - மிகவும் தீக்ஷ்ணனாய்க் கொண்டு
அடும், Adum - தஹிக்கின்றான்,
ஆல், Aal - அந்தோ!
செழு, Sezhu - செழுமைதங்கிய
தடம், Thadam - தடங்களாலும்
பூ சோலை, Poo Cholai - பூஞ்சோலைகளாலும்
சூழ், Sool - சூழப்பட்ட
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
கைதொழுதேன், Kaithozhuthen - கைதொழுத யான்
என்தன் எழில்நிற மும், Enthan Ezhilnira Mum - எனது அழகிய நிறத்தையும்
சங்கும், Sangum - வளைகளையும்
இழந்திருந்தேன், Izhandhirundhen - இழந்து விட்டேன்