திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1786 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1786பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகதா காரனாய் இருக்கிறவன் –அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன் அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் – சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே) 9
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப் போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன் ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –9-4-9
பதவுரை Show / Hide
வேதமும், Vedhamum - வேதஸ்வரூபியாகவும்
வேள்வியும், Velviyum - யஜ்ஞஸ்வரூபியாகவும்
விண்ணும், Vinnum - மேலுலகங்களாகவும்
இரு சுடரும், Iru Sudarum - சந்திரஸூர்யர்களாகவும்
ஆதியும், Aadhiyum - ஜகத்காரண பூதகனாகவும்
ஆனான், Aanaan - ஆன பெருமான்
நமக்கு, Namakku - நம் திறத்திலே
அருள் தந்த ஆ, Arul Thanda Aa - அருள் செய்தவிதம் என்னே!;
போது அலரும், Podhu Alarum - பூக்கள் மலரப்பெற்ற
புன்னை சூழ், Punnai Soozh - புன்னைமரங்களால் சூழப்பட்ட
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
கைதொழுதேன், Kaithozhuthen - தொழவிரும்பியவளான
நானும், Naanum - நானும்
ஓதமும், Othathum - கடலும்
உறங்காது இருந்தேன், Urangathu Irundhen - கண்ணுறக்கமற் றிருக்கிறோம்.