திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1788 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு பெறாதே இருக்கிற நமக்கு நாட்டுப் பகையாக விட்டதே) 1 | தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் –9-5-1 | பதவுரை Show / Hideதவளம் இளபிறை, Thavalam Ilapirai - வெண்ணிறமுள்ள பாலசந்திரனும் துள்ளும் முந்நீர், Thullum Munnir - அலையெறிகின்ற கடலும் தண் மலர்தென்றலோடு, Than Malarthenralodu - குளிர்ந்து பூக்களில்படிந்து வீசுகின்ற தென்றற் காற்றும் அன்றில், Anril - அன்றிற் பறவையும் ஒன்றி, Onri - ஒன்று சேர்ந்து என் நெஞ்சகம், En Nenjachagam - என்மனமானது துவள, Thuvazhal - துர்ப்பலமாம்படியாகவும் சோர, Soora - சிதிலம்படியாகவும் ஈரும், Eerum - நோவுபடுத்துகின்றன; சூழ் பனி நாள், Sool Pani Naal - எங்கும் பனிபரவியிருக்கு மிக் காலத்தில் துயிலாது இருப்பேன், Thuyilaadhu Iruppein - கண்ணுறங்காதேகிடக்கிறேன்; இவளும் ஓர் பெண் கொடி என்று இரங்கார், Ivalum Oru Pen Kodi Endru Irangaar - இவள் ஒரு இளம்பெண் ணன்றோ? என்று மனமிரங்காதவராய் என்கலம் ஐந்தும், Enkalam Aindhum - எனது பஞ்சேந்திரிய வுணர்ச்சியையும் முன்கொண்டு, Munkondu - முன்பு கொள்ளை கொண்டு பிரிந்து போன குவளை மலர்நிறம் வண்ணர், Kuvazhai Malarniram Vannaar - கருநெய்தற்பூவின் நிறம் போன்ற நிறமுடையரான பெருமாள் மண்ணு, Mannu - நித்யவாஸம்பண்ணுகிற குறுங் குடிக்கே, Kurung Kudikke - திருக்குறுங்குடியிலேயே என்னை உய்த்திடு மின், Ennai Uyththidu Min - என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள் |