திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1790 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1790பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம் இனம் உள்ள ஊரிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் – தர்ச நீயமான மயில் நெருங்கி வர்த்திக்கிற பர்யந்தத்தை உடைத்தான ஸ்ரீ திருக்குறுங்குடி யிலே கொடு போய் பொகடப் பாருங்கோள்) 3
காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும் போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே யொக்கும் வாடை சொல்லில் மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன் கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் –9-5-3
பதவுரை Show / Hide
காலையும், Kaalaiyum - காலைப்பொழுதும்
மாலை ஒற்றுண்டு, Maalai Otrundu - மாலைப்பொழுதுபோதலு யிருந்து நலிகின்றது;
கங்குல் நாழிகை, Gangul Naazhikai - இரவின் நாழிகை
ஊழியின், Oozhiyin - கல்பகாலத்திற் காட்டிலும்
நீண்டு, Neendu - பெருகி
உலாவும் போல்வது ஓர்தன்மை புகுந்து நிற்கும், Ulaavum Polvadhu Oorthanmai Pugundhu Nirkum - (யமபடரைப் போலே) ஸஞ்சரிக்கிறாப் போன்றத்தன்மை பெற்றிருக்கின்றது,
வாடை சொல்லில், Vaadai Sollil - வாடையின் தன்மையைப் பற்றிச் சொல்லப் புகுந்தால்
பொங்கு அழலே, Pongu Azhale - எரிகின்ற நெருப்பே போன்றிருக்கும்;
மாலவன், Maalavan - மிகப் பெரியவனாயும்
மா மணிவண்ணன், Maa Manivannan - நீலமணிவண்ணனாயு மிருக்கிற அப்பெருமானுடைய
மாயம், Maayam - (நம்மைக் கொல்வதற்கான மாயச் செய்கைகள்)
மற்றும் உள, Matrum Ula - இன்னமும் பலவுண்டு;
அவை வந்திடா முன், Avai Vandida Mun - அவையும் தலைகாட்டுவதற்கு முன்னமே
கோலம் மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே,, Kolam Mayil Payilum Puravin Kurungkudikke - அழகிய மயில்கள் நெருங்கி வாழ்கிற புறவுகளையுடைய என்னை உய்த்திடுமின்