திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1793 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1793பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள் – கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே) 6
எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார் நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம் கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6
பதவுரை Show / Hide
ஏந்து இழையார், Aendhu Izhaiyar - ஆபரணங்களணிந்துள்ள பெண்கள் (- (ஆகையாலே) (குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்:-))
எல்லியும் நல்பகலும் இருந்தே, Elliyum Nalpagalum Irundhe - இரவும் பகலும் போதுபோக்கற்று இருந்துகொண்டு
ஏசிலும் எசுக, Esilum Esuga - பழிசொன்னாலும் சொல்லட்டும்:
நல்லர், Nallar - (அவர்கள்) பாக்யவதிகளன்றோ?
அவர் திறம் நாம் அறியோம், Avar Thiram Naam Ariyom - அவர்களைப் பற்றி நமக்கு ஆராய்ச்சிவேண்டா;
நமக்கு, Namakku - நமக்கு
நாண் மடம் அச்சம் இங்கு இல்லை, Naan Madham Acham Ingu Illai - பெண்மைக்குணங்கள் அற்றுப்போயின;
வல்லன சொல்லி, Vallana Solli - தங்களாலியன்றவற்றை (வாய் கூசாமல்) சொல்லி
மகிழ்வரேலும், Magizhvarelum - சிரித்தார்களேயாகிலும்
நாம், Naam - நாம்
மா மணி வண்ணரை, Maa Mani Vannarai - நீலமணிவண்ணரான பெருமாளை
மறவோம், Maravom - மறக்கமாட்டோம்;
கொல்லை, Kollai - தோட்டங்களிலே
வளர், Valar - வளர்கின்ற
இள முல்லை, Ila Mullai - இளமுல்லைக் கொடிகள்
புல்கு, Pulgu - படரப்பெற்ற