திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1796 | பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கோவலர் கூத்தன் -என்றபடி இறே இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடப் பாருங்கோள் – தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன் விரும்பி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் குறுங்குடியிலே) 9 | சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-9 | பதவுரை Show / Hideஎன் கொங்கை, En Kongai - எனது முலைகள் (- (ஆகையாலே) (குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-.)) அவன்தன், Avanthan - அவனுடைய மொய் அகலம், Moy Akalam - அழகிய திருமார்பை அணையாது, Anaiyadhu - அணையப்பெறாமல் வாளா, Vaalai - வீணாக மூர்த்திடுகின்றன, Moorthidikkinrana - பருக்கின்றன; கூத்தன், Kooththan - மநோஹரமான சேஷ்டிதங்களை யுடையவனும் இமையவர்கோன், Imaiyavarkon - நித்யஸூரிகட்குத் தலைவனுமான பெருமான் விரும்பும், Virumbum - விரும்பிவர்த்திக்கு மிடமான |