திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1797 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1797பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் – இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே) 10
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக் கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக் கொற்றவன் முற்றுலக ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-10
பதவுரை Show / Hide
தென் இலங்கை, Then Ilangai - தென் திசையிலுள்ள இலங்கா புரியானது
மலங்க, Malanga - கலங்கும்படியாக
செற்றவன், Settravan - த்வம்ஸம்பண்ணினவனும்
தேவபிரான், Devapiraan - தேவர்களுக்குப் பிரபுவானவனும்
திரு மாமகனை டிபற்றும் என் நெஞ்சம் கோயில் கொண்ட, Thiru Mamakanai Tipratum En Nenjam Koyil Konda - பெரிய பிராட்டியாரைப் பெற்றுவைத்தும் என் மனதைக் கோயிலாகக்கொண்டுள்ளவனுமான
பேரருளாளன், Perarulalan - பேரருளாளப்பெருமானுடைய
பெருமை, Perumai - பெருமையை
பேச கற்றவன், Pesakattravan - அருளிச் செய்ய வல்லவரும்
காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களை யுடையவருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வாருடைய
கண்ணகத்தும், Kannagathum - கண்களினுள்ளும்
மனத்தும், Manathum - நெஞ்சினுள்ளும்
அகலா, Akala - விட்டுநீங்காத
கொற்றவன், Kotravan - ஸர்வேச்வரனாய்
முற்றுலகு ஆளி, Mutrulagu Aali - ஸகலலோகநாதனான பெருமான்
நின்ற, Nindra - நித்யவாஸம்பண்ணப்பெற்ற குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்