திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1801 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தலைகள் பத்தும் சிதறும்படியாக சென்று அடை மதிள் படுத்தி ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும் தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே) 4 | சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரவும் கரமும் துனித்த வுரவோனூர் போலும்
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே –9-6-4 | பதவுரை Show / Hideஇரவும் பகலும், Iravum Pagalum - எப்போதும் தேன், Then - வண்டுகள் ஈன், Een - இனிமையாக முரல, Mural - ரீங்காரஞ் செய்யப் பெற்றதும் மன்று எல்லாம், Manru Ellam - வெளிநிலமுழுதும் குரவின் பூவேதான், Kuravin Poovethaan - குருவம்பூக்களே மணம் நாறும், Manam Naarum - பரிமளிக்கப்பெற்றதுமான குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது முன், Mun - முன்பு (ராமாவதாரத்தில்) அரக்கன், Arakkan - இராவணனென்னும் ராக்ஷஸனது சிரம் ஐந்தும் ஐந்தும், Sirama Aindhum Aindhum - பத்துத் தலைகளும் சிந்த, Sindha - சிதறும்படி சென்று, Sendru - (இலங்கைக்கு) எழுந்தருளி உரமும் கரமும், Uramum Karumum - (அவனது) மார்பையும் கைகளையும் துணித்த, Thuniththa - துணித்தொழித்தவனான உரவோன், Uravon - பெருமிடுக்குடைய பெருமானுடைய ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும். |