திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1801 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1801பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தலைகள் பத்தும் சிதறும்படியாக சென்று அடை மதிள் படுத்தி ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும் தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே) 4
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரவும் கரமும் துனித்த வுரவோனூர் போலும் இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம் குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே –9-6-4
பதவுரை Show / Hide
இரவும் பகலும், Iravum Pagalum - எப்போதும்
தேன், Then - வண்டுகள்
ஈன், Een - இனிமையாக
முரல, Mural - ரீங்காரஞ் செய்யப் பெற்றதும்
மன்று எல்லாம், Manru Ellam - வெளிநிலமுழுதும்
குரவின் பூவேதான், Kuravin Poovethaan - குருவம்பூக்களே
மணம் நாறும், Manam Naarum - பரிமளிக்கப்பெற்றதுமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது
முன், Mun - முன்பு (ராமாவதாரத்தில்)
அரக்கன், Arakkan - இராவணனென்னும் ராக்ஷஸனது
சிரம் ஐந்தும் ஐந்தும், Sirama Aindhum Aindhum - பத்துத் தலைகளும்
சிந்த, Sindha - சிதறும்படி
சென்று, Sendru - (இலங்கைக்கு) எழுந்தருளி
உரமும் கரமும், Uramum Karumum - (அவனது) மார்பையும் கைகளையும்
துணித்த, Thuniththa - துணித்தொழித்தவனான
உரவோன், Uravon - பெருமிடுக்குடைய பெருமானுடைய
ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும்.