திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1802 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் – முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு) 5 | கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும்
மைவைத்திலங்கு கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே –9-6-5 | பதவுரை Show / Hideகொவ்வைக் கனிவாய், Kovvaik Kanivai - கோவைப்பழம்போற் சிவந்த வாயையுடைய கிள்ளை, Killa - கிளிகளானவை மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான், Mai Vaiththu Ilangu Kannaar Thangal Mozhi Oppaan - மையிட்டு விளங்குகின்ற கண்களையுடைய பெண்களில் பேச்சுப்போல பேசும், Pesum - பேசுமிடமான குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது அன்று, Andru - முன்பொருகால் அமரில், Amaril - பாரதயுத்தத்தில் கவ்வை களிறு மன்னர், Kavvai Kaliru Mannar - பேரொலிகொண்ட யானைகளை யுடையவரான அரசர்கள் மாள, Maala - மாண்டுபோம்படியாக ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக கலி மா தேர், Kali Maa Ther - திண்ணிய பெரியதேரை உய்த்தான், Uyiththaan - நடத்தின பெருமானுடைய ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும் |