திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1802 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1802பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன் வர்த்திக்கிற ஊர் போலும் – முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று தாழ்வு செய்து திரிகைக்கு) 5
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர் ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும் மைவைத்திலங்கு கண்ணார் தங்கள் மொழி யொப்பார் கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே –9-6-5
பதவுரை Show / Hide
கொவ்வைக் கனிவாய், Kovvaik Kanivai - கோவைப்பழம்போற் சிவந்த வாயையுடைய
கிள்ளை, Killa - கிளிகளானவை
மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான், Mai Vaiththu Ilangu Kannaar Thangal Mozhi Oppaan - மையிட்டு விளங்குகின்ற கண்களையுடைய பெண்களில் பேச்சுப்போல
பேசும், Pesum - பேசுமிடமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது
அன்று, Andru - முன்பொருகால்
அமரில், Amaril - பாரதயுத்தத்தில்
கவ்வை களிறு மன்னர், Kavvai Kaliru Mannar - பேரொலிகொண்ட யானைகளை யுடையவரான அரசர்கள்
மாள, Maala - மாண்டுபோம்படியாக
ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
கலி மா தேர், Kali Maa Ther - திண்ணிய பெரியதேரை
உய்த்தான், Uyiththaan - நடத்தின பெருமானுடைய
ஊர்போலும், Oorpolum - திவ்யதேசமாகும்