திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1803 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாமாராதன உபகரணங்களைத் தரித்துக் கொண்டு அதிகாரிகளான நீங்கள் அடைவு கெட ஏத்தி அஞ்சலியை பண்ணி உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள்) 6 | தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்
மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில்
கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே –9-6-6 | பதவுரை Show / Hideதொண்டீர்காள், Thondeerkaal - தொண்டர்களே! (- (“கூனீர்“ என்பதில் “நீர்மை“ என்னும் பண்பு ஈறுபோயிற்று, நீர்மையாவது ஸ்வபாவம்.)) தூ நீர், Thoo Neer - பரிசுத்தியை யுடையரான நீங்கள் தீ, Thee - (தூபதீபங்களுக்கான) அக்நியையும் நீர், Neer - (அர்க்கியத்துக்கான) தீர்த்தத்தையும் வண்ணம் மா மலர், Vannam Maa Malar - நாநாவர்ணமுடைய சிறந்த புஷ்பங்களையும் விரை, Virai - பரிமளத்ரவ்யங்களையும் ஏந்திக் கொண்டு, Aendhik Kondo - எடுத்துக்கொண்டு பாவி, Paavi - (எம்பெருமானைத்) துதித்து தொழுமின், Thozhumin - தொழுங்கோள், எழுமின், Ezhumin - உஜ்ஜீவிக்கப் பாருங்கோள் வானில், Vaanil - ஆகாசத்தில் கூன் நீர், Koon Neer - வளைந்திருப்பதை இயற்கையாகவுடைய மதியை, Madhiyai - சந்திரனை மாடம் தீண்டும், Maatam Theendum - மாடங்கள் ஸ்பர்சிக்கும்படியாக ஓங்கியுள்ள குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியானது மா நீர் வண்ணர், Maa Neer Vannarar - கடல் வண்ணரான பெருமாள் மருவி உறையும் இடம், Maruvi Uraiyum Idam - பொருந்தியாழுமிடமா யிருக்கின்றது. |