திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1804 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1804பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற விஷயங்களைப் பற்றி இருக்கிற மநோ ரதத்தைத் தவிர்த்து அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற ஊரைச் சென்று அடையுங்கோள்) 7
வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள் சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான் கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே –9-6-7
பதவுரை Show / Hide
அடியீர்காள், Adiyeergal - பகவத் பக்தர்களே!
நீர், Neer - நீங்கள்
வல்லி சிறு நுண் இடையாரிடை, Valli Siru Nun Idaiyaridai - கொடிபோன்று மிக நுண்ணிய இடையை யுடையரான பெண்களிடத்து
வைக்கின்ற, Vaikkindra - வைத்திருக்கிற
அல்லல் சிந்தை தவிர, Allal Sindhai Thavira - துக்ககரமான சிந்தனையைத் தவிர்த்து
கொல்லை முல்லை, Kollai Mullai - கொல்லைகளிலுள்ள முல்லைகளானவை
சொல்லில் திரு அனையார், Sollil Thiru Anaiyaar - சொல்லுமிடத்து ஸ்ரீ மஹா லக்ஷ்மியை யொத்திருக்கின்ற ஸ்த்ரீகளினுடைய
கனிவாய், Kanivai - கோவைக்கனிபோன்ற வாயிலுள்ள
எயிறு ஒப்பான், Eiyiru Oppaan - பற்களோடொப்ப
மெல் அரும்பு, Mel Arumbu - அழகிய அரும்புகளை
ஈனும், Eenum - புறப்படவிடுமிடமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை
அடைமின், Adaimin - அடையுங்கோள்