திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1806 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1806பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் – வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள்) 9
நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச் சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள் என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக் குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே –9-6-9
பதவுரை Show / Hide
தொண்டர்காள், Thondarkal - பகவத்பக்தர்களே!
நின்ற வினையும், Nindra Vinaikum - ஸஞ்சிதகருமங்களும்
துயரும், Thuyarum - ப்ராரப்தகருமங்களும்
கெட, Keda - ஒழியும்படியாக
மா மலர், Maa Malar - சிறந்த புஷ்பங்களை
ஏந்தி, Aendi - எடுத்துக்கொண்டு
இரவும் பகலும் என்றும், Iravum Pagalum Endrum - இரவும் பகலுமாகிய எக்காலத்திலும்
வரி வண்டு இசை பாட, Vari Vandu Isai Paada - வஜீவண்டுகள் இசை பாடப்பெற்றதும்
குன்றின் முல்லை, Kundrin Mullai - மலையிலுள்ள முல்லைப் பூக்கள்
மன்றிடை, Mandridai - வெளிநிலங்களிலே
நாறும், Naarum - கமழப்பெற்றதுமான
குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை
சென்று, Sendru - அடைந்து
பணிமின், Panimin - ஸேவியுங்கள்
தொழுமின், Thozhumin - அஞ்ஜலிபண்ணுங்கள்,
எழுமின், Ezhumin - (இவ்வகையாலே) உஜ்ஜீவிக்கப்பாருங்கள்