திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1817 | பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தைக் கற்று வல்லார் –பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய் தேஹ சமனந்தரம்-நித்ய விபூதியிலே புக்கு-ஏஷஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே நிரதிசய ஆநந்த யுக்தராவார்) 10 | மறைவலார் குறைவிலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை
சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன்
கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவைகற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –9-7-10 | பதவுரை Show / Hideமறை வலார், Marai Valar - வேதமல்லவர்கள் குறைவு இலார், Kuraivu Ilar - குறைவொன்றுமில்லாதவர்களாய்க் கொண்டு உறையும் ஊர், Urayum Oor - நித்யவாஸம்பண்ணுமிட மான வல்லவாழ், Vallavaazh - திருவல்லவாழில் எழுந்தருளியிருக்கிற அடிகள் தம்மை, Adigal Thammai - ஸ்வாமிவிஷயமாக சிறைகுலாவண்டு அறைசோலை சூழ், Sirai Kulavandu Araisolai Soozh - சிறகையும் கொண்டாட்டத்தையுமுடைய வண்டுகள் ரீங்காரஞ் செய்யப்பெற்ற சோலைகளால் சூழப்பட்ட கோலம், Kolam - அழகிய நீள், Neel - பெரிய ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும் கறை உலாம், Karai Ulaam - ரத்தக்களைகழுவாத வேல் வல்ல, Vel Valla - வேற்படையை யுடையருமான சலியன், Saliyan - திருமங்கையாழ்வார் வாய் ஒலி, Vaai Oli - திருவாயமலர்ந்த இவை, Ivai - இப்பத்துப் பாசுரங்களை கற்று வல்லார், Kattru Vallar - ஓதியுணரவல்லவர்கள் இறைவர் ஆய், Iraivar Aay - அரசர்களாயிருந்துகொண்டு இரு நிலம், Iru Nilam - விசாலமான இந்நிலத்தை காவல் பூண்டு, Kaval Poondhu - ஆண்டு கொண்டு நன்கு இன்பம் எய்துவரார், Nangu Inbam Eydhuvarar - பரமாநந்தமடையப்பெறுவர் |