Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 182 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
182பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 1
ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் 2-7-1
தேனில், Thenil - தேனைக் காட்டிலும்
இனிய, Iniya - போக்யனாயிருக்கிற
பிரானே, Pirane - ப்ரபுவே!
பற்றாதார் எல்லாம், Patraadhaar ellaam - பகைவரெல்லாரும்
சிரிப்ப, Sirippa - பரிஹஸிக்கும்படி
பானையில் பாலை பருகி, Paanaiyil paalai parugi - (கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து (பின்பு)
உன், Un - உன்னுடைய
கரிய, Kariya - ஸ்யாமமான
திருமேனி, Thirumeni - அழகிய திருமேனி
வாட, Vaada - வாடும்படி
கானகம் எல்லாம் திரிந்து, Kaanagam ellaam thirindhu - காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு
ஆநிரை, Aanirai - பசுக்களின் திரளை
மேய்க்க, Meikkha - மேய்ப்பதற்கு
நீ போதி, Nee pothi - ஸூ குமாரமான நீ போகிறாய்;
அரு மருந்து ஆவது, Aru marundhu aavadhu - (நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை சம்சாரிகளுக்கு சம்சாரம் போக்கவும் நித்யர்களுக்கு போகம் அனுபவிக்க மருந்து
அறியாய், Ariyaai - அறிகிறாயில்லை;
செண்பகம் பூ, Senbagam poo - (இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு) செண்பகப் பூவை
சூட்ட, Soota - (நான்) சூட்டும்படி
வாராய், Vaaraay - வருவாயாக