| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 182 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 1 | ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத் தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் 2-7-1 | தேனில், Thenil - தேனைக் காட்டிலும் இனிய, Iniya - போக்யனாயிருக்கிற பிரானே, Pirane - ப்ரபுவே! பற்றாதார் எல்லாம், Patraadhaar ellaam - பகைவரெல்லாரும் சிரிப்ப, Sirippa - பரிஹஸிக்கும்படி பானையில் பாலை பருகி, Paanaiyil paalai parugi - (கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து (பின்பு) உன், Un - உன்னுடைய கரிய, Kariya - ஸ்யாமமான திருமேனி, Thirumeni - அழகிய திருமேனி வாட, Vaada - வாடும்படி கானகம் எல்லாம் திரிந்து, Kaanagam ellaam thirindhu - காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு ஆநிரை, Aanirai - பசுக்களின் திரளை மேய்க்க, Meikkha - மேய்ப்பதற்கு நீ போதி, Nee pothi - ஸூ குமாரமான நீ போகிறாய்; அரு மருந்து ஆவது, Aru marundhu aavadhu - (நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை சம்சாரிகளுக்கு சம்சாரம் போக்கவும் நித்யர்களுக்கு போகம் அனுபவிக்க மருந்து அறியாய், Ariyaai - அறிகிறாயில்லை; செண்பகம் பூ, Senbagam poo - (இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு) செண்பகப் பூவை சூட்ட, Soota - (நான்) சூட்டும்படி வாராய், Vaaraay - வருவாயாக |