| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 182 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - “இந்த கிருஷ்ணன் எங்கள் வீட்டில் கைப்பானையிலிருந்த பாலைக் குடித்துப் போனான்” என்று உகவாதார் சொல்லும்படி கறந்த பானையிலிருந்த பச்சைப் பாலைப் பருகுமவனான பித்தனாய் இருந்தாலும் தேனைவிட இனியவனாயிருப்பவனே! உன்னுடைய திருமேனியின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் காட்டிலே போய்த் திரிவது தவிர்ந்து செண்பகப்பூவை நான் சூட்டும்படி வரவேணுமென்றவாறு. அருமருந்தாவதறியாய் – இவ்வுலகத்தில் உள்ளார்க்குப் பிறவி நோயறுக்கும் மருந்துமாய் பரம பதத்தில் உள்ளார்க்குப் போக மகிழ்ச்சிக்கு மருந்துமாய் நீயிருப்பதை அறிகிலை காண். பற்றாதார் சிரிப்ப – பற்றுமவர்கள் (அன்பர்கள்) இவன் செயலுக்கு உகப்பர் போலும். தேனில் – ஐந்தாம் வேற்றுமை. 1 | ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத் தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் 2-7-1 | தேனில், Thenil - தேனைக் காட்டிலும் இனிய, Iniya - போக்யனாயிருக்கிற பிரானே, Pirane - ப்ரபுவே! பற்றாதார் எல்லாம், Patraadhaar ellaam - பகைவரெல்லாரும் சிரிப்ப, Sirippa - பரிஹஸிக்கும்படி பானையில் பாலை பருகி, Paanaiyil paalai parugi - (கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து (பின்பு) உன், Un - உன்னுடைய கரிய, Kariya - ஸ்யாமமான திருமேனி, Thirumeni - அழகிய திருமேனி வாட, Vaada - வாடும்படி கானகம் எல்லாம் திரிந்து, Kaanagam ellaam thirindhu - காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு ஆநிரை, Aanirai - பசுக்களின் திரளை மேய்க்க, Meikkha - மேய்ப்பதற்கு நீ போதி, Nee pothi - ஸூ குமாரமான நீ போகிறாய்; அரு மருந்து ஆவது, Aru marundhu aavadhu - (நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை சம்சாரிகளுக்கு சம்சாரம் போக்கவும் நித்யர்களுக்கு போகம் அனுபவிக்க மருந்து அறியாய், Ariyaai - அறிகிறாயில்லை; செண்பகம் பூ, Senbagam poo - (இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு) செண்பகப் பூவை சூட்ட, Soota - (நான்) சூட்டும்படி வாராய், Vaaraay - வருவாயாக |