திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1822 | பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற பூசலிலே பொறுத்த ஸ்ரீ ஸ்வாமிகள் வர்த்திக்கிற தேசம்) 5 | வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-5 | பதவுரை Show / Hideவணங்கல் இல் அரக்கன், Vanangal Il Arakkan - வணக்கமற்ற இராவணன் (- (மட நெஞ்சே!-) (அடிகள் தம் கோயில்) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா-.)) செரு களத்து, Seru Kalathu - போர்க்களத்தில் அவிய, Aviyam - முடியும்படியாகவும் மணி முடி ஒருபதும் புளர, Mani Mudi Orupadhum Pulara - (அவனது) மணியணிந்த முடிகள் பத்தும் தரையில் புரளும்படியாகவும் அவன்தன் கவந்தம், Avanthan Kavantham - அவனுடைய கபந்தம் அணங்கு எழுந்து, Anangu Ezhundhu - தெய்வாவேசங் கொண்டது பொல நின்று ஆட, Ninru Aada - நின்று ஆடும்படியாகவும் அமர் செய்த, Amar Seitha - யுத்தம் பண்ணின பிணங்களில், Pinangalil - ஒன்றுக்கொன்று பிணங்கியிருப்பதோடு கூடின நெடு வேய் நுதி, Nedu Vei Nuthi - ஓங்கின மூங்கிலின் நுனி முகம் கிழிப்ப, Mugam Kizhippa - (மலையுச்சியிலுள்ள தேன் கூட்டின்) வாயைக்கிழிக்க பிரசம் வந்து இழிதா, Piracham Vandu Izhidha - (அதிலுள்ள) தேனீக்கள் சிதற பெரு தேன், Peru Then - அதிகமான தேனினுடைய மணம், Manam - பரிமளம் கமழ், Kamazh - வீசப்பெற்ற சாரல், Saaral - பக்கங்களையுடைத்தான |