திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1828 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து – பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து – ஸ்ரீ கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் – பிற்பாடராய்-இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் – அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்அணைந்தே விட வல்லளோ) 1 | மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ –9-9-1 | பதவுரை Show / Hideமூவரில், Moovarinil - த்ரிமூர்த்திகளுள் முன் முதல்வன், Mun Muthalvan - முக்கியனும் முழங்கு ஆர், Muzhangu Aar - (திரைக்கிளப்பத்தாலே கோஷித்தல் பொருந்திய கடலுள், Kadalul - திருப்பாற்கடலிலே கிடந்து, Kidandhu - திருக்கண்வளர்ந்தருளி உந்தி, Undhi - திருநாபியில் அலர், Alar - மலர்கின்ற பூ தன்னுள், Poo Thannul - (தாமரைப்) பூவிலே புவனம், Puvanam - உலகத்தை படைத்து, Padaiththu - ஸ்ருஷ்டித்து உண்டு, Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றில்வைத்து நோக்கி உமிழ்ந்த, Umizhndha - பிறகு வெளிப்படுத்திவனும் தேவர்கள் நாயகனை, Thevargal Nayakanai - நித்யஸூரிகளுக்கு நாதனும் திருமாலிருஞ் சோலை நின்ற, Thirumaliruncholai Nindra - திருமாலிருஞ்சோலை மலையில் நிற்பவனுமான கோவலர் கோவிந்தனை, Kovalaar Govindhanai - கோபாலக்ருஷ்ணனான எம்பெருமானை கொடி எர் இடை, Kodi Er Idai - கொடிபோன்ற இடையை யுடையளான என் மகள் கூடும் கொலோ, Koodum Kolon - அணையப்டபெறுவளோ? |