Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 183 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
183பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 2
கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2-7-2
கண்கள், Kangal - கண்களானவை
உன்னை கண்டால், Unnai kandaal - உன்னைப் பார்த்தால்
கரு உடை மேகங்கள், Karu udai mekangal - கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை
கண்டால், Kandaal - பார்த்தால் (அதை)
ஒக்கும், Okkum - ஒத்துக் குளிர்கின்ற
உரு உடையாய், Uru udayaai - வடிவை யுடையவனே!
உலகு ஏழும், Ulagu ezhum - ஏழுலகங்களும்
உண்டாக, Undaaga - ஸத்தை பெறும்படி
வந்து பிறந்தாய், Vandhu pirandhaai - திருவவதரித்தவனே!
திரு உடையாள், Thiru udayaal - (உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா, Manavaala - நாயகனே!
திரு அரங்கத்தே, Thiru arangatthae - கோயிலிலே
கிடந்தாய், Kidandhai - பள்ளி கொண்டிருப்பவனே!
மணம், Manam - வாஸனை
மருவி கமழ்கின்ற, Maruvi kamazhkindra - நீங்காமலிருந்து பரிமளிக்கிற
மல்லிகைப் பூ, Mallikai poo - மல்லிகைப் பூவை
சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய்