| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 183 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 2 | கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய் உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய் -2-7-2 | கண்கள், Kangal - கண்களானவை உன்னை கண்டால், Unnai kandaal - உன்னைப் பார்த்தால் கரு உடை மேகங்கள், Karu udai mekangal - கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை கண்டால், Kandaal - பார்த்தால் (அதை) ஒக்கும், Okkum - ஒத்துக் குளிர்கின்ற உரு உடையாய், Uru udayaai - வடிவை யுடையவனே! உலகு ஏழும், Ulagu ezhum - ஏழுலகங்களும் உண்டாக, Undaaga - ஸத்தை பெறும்படி வந்து பிறந்தாய், Vandhu pirandhaai - திருவவதரித்தவனே! திரு உடையாள், Thiru udayaal - (உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு மணவாளா, Manavaala - நாயகனே! திரு அரங்கத்தே, Thiru arangatthae - கோயிலிலே கிடந்தாய், Kidandhai - பள்ளி கொண்டிருப்பவனே! மணம், Manam - வாஸனை மருவி கமழ்கின்ற, Maruvi kamazhkindra - நீங்காமலிருந்து பரிமளிக்கிற மல்லிகைப் பூ, Mallikai poo - மல்லிகைப் பூவை சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |