திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1831 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் – நமக்கு எளியவன் ஆனவனை –அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள் கிட்ட வல்லளேயோ) 4 | சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே –9-9-4 | பதவுரை Show / Hideமுன், Mun - முன்பொருகாலத்தில் (- (திருமாலிருஞ்சோலையில்)) சிங்கம் அது ஆய், Singam Adhu Aay - நாஸிம்ஹ மூர்த்தியாகி அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அசுரனுடைய திறல் ஆகம், Thiral Aagam - வலிமையுள்ள மார்பை கீண்டு, Keendu - எளிதாகக்கிழித்து உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்தவனும் மா, Maa - பெரிய பங்கயம் மலர், Pangayam Malar - தாமரைப்பூப்போன்ற கண், Kan - திருக்கண்களை யுடையவனும் பரனை, Paranai - எல்லாரினும் மேம்பட்டவனும் எம், Em - எமக்கு நாதனும் பரம் சுடரை, Param Sudarai - பரஞ்சோதியென்று ஓதப்பட்டவனும், திங்கள், Thingal - சந்திரமண்டலத்தோடும் மா முகில், Maa Mukil - மேகமண்டலத்தோடும் சேர், Ser - படிந்த (சிகரத்தையுடைத்தான) நல், Nal - விலக்ஷணமான நின்ற, Nindra - நிற்பவனுமான நங்கள் பிரானை, Nangal Piranai - எம்பெருமானை என் நல் நுதல், En Nal Nuthal - அழகிய நெற்றியை யுடையளான என் மகள் இன்று, Indru - இப்போது நணுகும் கொல், Nanugum Kol - சென்று சேர்ந்திடுவனோ? |