திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1832 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1832பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி அளந்தவன் – ஸ்ரீ திருமலையிலே வந்து நின்ற –அயர்வறும் அமரர்கள் அதிபதியை அவர்களோடு ஒத்த ருசியை உடைய இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ) 5
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன் தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற வானவர் கோனை யின்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5
பதவுரை Show / Hide
தானவன், Thaanavan - (மஹாபலியென்னும்) அசுரனுடைய (- (திருமாலிருஞ்சோலையில்) (என்பெண்மகள்))
வேள்வி தன்னில், Velvi Thannil - யாகத்திலே
தனியே, Thaniye - அத்விதீயனான
குறள் ஆய், Kural Aayi - வாமநமூர்த்தியாய் (எழுந்தருளி)
நிமிர்ந்து, Nimirndhu - (உதகதானம் பெற்றவாறே) ஓங்கிவளர்ந்து
வானமும், Vaanamum - மேலுலகங்களையும்
மண் அகமும், Man Akamum - கீழுலகங்களையும்
திரி விக்கிரமன், Thiri Vikkiraman - த்ஜீவிக்ரம மூர்த்தியானவனும்
தேன் அமர் பூ பொழில் சூழ், Then Amar Poo Pozhil Soozh - தேன்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட
நின்ற, Nindra - நிற்பவனுமான
வானவர் கோனை, Vaanavar Konai - தேவாதிதேவனை
இன்று, Indru - இப்போது
வணங்கி தொழவல்லள், Vanangi Thozhavallal - ஸேவிக்கப்பெறுவளோ?