திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1833 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1833பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை – பர பக்தியையும் அத்வேஷத்தையும் பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் – அந்த அவதார பலம் இருக்கிறபடி –பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை – அக் குழலுக்கு தகுதியான அவயவ சோபையை உடையவள் கிட்ட வல்லளேயோ) 6
நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –9-9-6
பதவுரை Show / Hide
நேசம் இல்லாதவர்க்கும், Nesam Illaadavarkkum - பரபக்தியில்லாதவர்களுக்கும் (- (திருமாலிருஞ்சோலையில்))
நினையாதவர்க்கும், Ninaiyaadavarkkum - (‘ஈச்வரனில்லை’ என்று நாஸ்திகவாதம் பண்ணுவதற்காகிலும் அவனை) நெஞ்சால் எண்ணாதவர்கட்கும்
அரியான், Ariyaan - கிட்டக்கூடாதவனும்,
வாசம் மலர் பொழில் சூழ், Vaasam Malar Pozhil Soozh - மணம்மிக்கமலர்களையுடைய சோலைகளால் சூழப்பட்ட
வட மா மதுரை, Vada Maa Madurai - திருவடமதுரையில்
தேசம் எல்லாம் வணங்கும், Desam Ellam Vanangum - எல்லாத தேசத்தவர்களாலும் வந்து வணங்கப்படும் தான்
நின்ற, Nindra - நிற்பவனும்
கேசவன் நம்பி தன்னை, Keesavan Nambi Thannai - சிறந்த குழல்கற்றையை யுடையனுமான பெருமானை
கெண்டை ஒண் கண்ணி, Kendai On Kanni - கெண்டைமீன் போன்ற கண்ணழகுடையளான என்மகள்
காணும் கொலோ, Kaanum Koloo - காணப்பெறுவளோ?