திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1834 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1834பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று – தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து எறடா நின்றுள்ள ஸ்ரீ திருமலையிலே – தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை – அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ) 7
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-7
பதவுரை Show / Hide
புள்ளினை வாய் பிளந்து, Pullinai Vaai Pilandhu - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனும் (- (திருமாலிருஞ்சோலையில்))
பொரு மா கரி கொம்பு ஒசித்து, Poru Maa Kari Kombu Osiththu - போர்செய்ய முயன்றி (குவலயாபீடமென்னும்) மதகரியின் கொம்பை முறித்தவனும்
கள்ளம் சகடு உதைத்த, Kallam Sakadu Uthaiththa - திருட்டெண்ணங்கொண்ட சகடாஸுரனை (த் திருவடிகளால்) உழைத்தொழித்தவனும்
கரு மாணிக்கம் மா மலையை, Karum Manikkam Maa Malaiyai - பெரியகரிய மாணிக்கமலை போன்ற வடிவையுடையவனும்
தெள் அருளி கொழிக்கும், Thal Aruli Kozhikkum - தெளிந்த அருவிகள் பிரவஹிக்கப்பெற்ற
நின்ற, Nindra - நிற்பவனும்
வள்ளலை, Vallalai - உதாரனுமான பெருமானை
வாள் நுதலாள், Vaal Nuthalaal - ஒளிபொருந்திய நெற்றியை யுடையளான என்மகள்
வணங்கி தொழ வல்லள் கொலோ, Vanangi Thozha Vallal Koloo - ஸேவிக்கப்பெறுவளோ?