திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1837 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் – காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய் இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை) 10 | தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –9-9-10 | பதவுரை Show / Hideதேடற்கு அரயவனை, Theedarku Arayavananai - (ஒருவற்கும் தன்முயற்சியாலே) தேடிப்பிடிக்க முடியாதவனும் திருமாலிருஞ்சோலை நின்ற, Thirumaliruncholai Nindra - திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருப்பவனும் ஆடல் பறவையனை, Aadal Paravaiyai - (ஸந்தோஷத்திற்குப் போக்குவிடன) ஆட்டத்திற்சிறந்த பெரிய திருவடியை ஊர்தியாகவுடையனுமான ஸுந்தரபாஹுவை. அணி ஆய் இழை காணும் என்று, Ani Aay Izhai Kaanum Endru - அழகிய ஆபரணங்களையுடைய என்மகள் காணப்பெறுவளென்று. மாடம் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன, Maadam Kodi Mathil Soozh Mangaiyaar Kalikanri Sonna - மாடங்களில் நாட்டின் கொடிகளோடு கூடின திருமதிள்களாலே சூழப்பட்ட திருமங்கை நாட்லுள்ளர்க்கு தலைவரான ஆழிவார்ருளிச்செய்த பாடல், Paadal - பாடலாகிய பனுவல் பத்தும், Panoval Pathum - இப்பத்துப்பாசுரங்களையும் பயில்பார்க்கு, Payilpaarakku - கற்பவர்களுக்கு பாவங்கள் இல்லை, Paavangal Illai - பாவமொன்று மில்லையாகும். |