திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1838 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1838பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அடியவர்க்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் – கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே ஒழுகுமா போலே-மேகம் பொன்களையே சிந்த – அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய் செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன்) 1
எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான் பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே –9-10-1
பதவுரை Show / Hide
எங்கள் எம் இறை, Engal Em Irai - எமக்கு அஸாதாரண ஸ்வாமியும் (- (எவ்விடத்துள்ளானென்னில்))
எம் பிரான், Em Piraan - எமக்கு உபகாரகனும்
இமை யோர்க்கு நாயகன், Imai Yorkku Naayagan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
ஏத்து, Aethu - துதிக்கின்ற
அடியவர் தங்கள் தம், Adiyavar Thangal Tham - பக்தர்களினுடைய
மனத்து, Manaththu - நெஞ்சிலே
பிரியாது, Priyaadhu - பிரியாமல் பொருந்தியிருந்து
அருள் புரிவான், Arul Purivaan - (அவர்கட்கு) அருள் செய்பவனுமான எம்பெருமான்
பொங்கு, Pongu - மேன்மேலும் கிளர்கின்ற
தண், Than - குளிர்ந்த
அருவி, Aruvi - அருவிகளானவை
புதம் செய்ய, Pudham Seyya - தாவிப்பாய,
பொன்களே சிதற, Pongkale Chithara - (அவ்வருவிகள் முகமாகப்) பொன்மணிகள் சிந்த
இலங்கு ஒளி, Ilangu Oli - (அதனால்) விளங்குகின்ற ஒளியையுடையதாயும்
செம் கமலம் மலரும், Sem Kamalam Malarum - செந்தாமரைப்பூக்கள் மலரப்பெற்றதாயுமுள்ள
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலெழுந்தருளி யுள்ளான்