திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1838 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக நெஞ்சை பிரியாதே இருந்து அடியவர்க்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் – கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே ஒழுகுமா போலே-மேகம் பொன்களையே சிந்த – அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய் செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன்) 1 | எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே –9-10-1 | பதவுரை Show / Hideஎங்கள் எம் இறை, Engal Em Irai - எமக்கு அஸாதாரண ஸ்வாமியும் (- (எவ்விடத்துள்ளானென்னில்)) எம் பிரான், Em Piraan - எமக்கு உபகாரகனும் இமை யோர்க்கு நாயகன், Imai Yorkku Naayagan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும் ஏத்து, Aethu - துதிக்கின்ற அடியவர் தங்கள் தம், Adiyavar Thangal Tham - பக்தர்களினுடைய மனத்து, Manaththu - நெஞ்சிலே பிரியாது, Priyaadhu - பிரியாமல் பொருந்தியிருந்து அருள் புரிவான், Arul Purivaan - (அவர்கட்கு) அருள் செய்பவனுமான எம்பெருமான் பொங்கு, Pongu - மேன்மேலும் கிளர்கின்ற தண், Than - குளிர்ந்த அருவி, Aruvi - அருவிகளானவை புதம் செய்ய, Pudham Seyya - தாவிப்பாய, பொன்களே சிதற, Pongkale Chithara - (அவ்வருவிகள் முகமாகப்) பொன்மணிகள் சிந்த இலங்கு ஒளி, Ilangu Oli - (அதனால்) விளங்குகின்ற ஒளியையுடையதாயும் செம் கமலம் மலரும், Sem Kamalam Malarum - செந்தாமரைப்பூக்கள் மலரப்பெற்றதாயுமுள்ள திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலெழுந்தருளி யுள்ளான் |