திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1839 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய துக்கங்களை எல்லாம் போக்குகைக்காக பிராட்டிமாரோடே கூட ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 2 | எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே –9-10-2 | பதவுரை Show / Hideஎவ்வம் நோய் தவிர்ப்பான், Evvam Noi Thavirppaan - துக்கஹேதுவான வியாதிகளை நீக்கியருள்பவனும் எமக்கு இறை, Emakku Irai - எமக்குவகுத்த ஸ்வாமியும் இன் நகை துவர் வாய் நிலம் மகள், In Nakai Thuvar Vaai Nilam Magal - இனிய புன்சிரிப்பையும் சிவந்த அதரத்தையுமுடையளான பூமிப்பிராட்டியினுடைய செல்வி, Selvi - அழகை தோய வல்லான், Thoya Vallaaan - அநுபவிக்கவல்லவனும் திரு மா மகட்கு இனியான், Thiru Maa Makadku Iniyaan - பெரிய பிராட்டியார்க்கு போக்யனுமான எம்பெருமான் வண்டு ஆடும், Vandu Aadum - வண்டுகள் சுழலமிடாநிற்கப் பெற்ற மௌவல் மாலையோடும், Mauval Maalaiyodum - சாதிமல்லிகைப் பூக்களோடும் மல்லிகை மாலையோடும், Mallikai Maalaiyodum - மல்லிகைப் பூக்களோடும் அணைந்த, Anaindha - ஸம்பந்தித்த மாருதம், Maarudham - காற்றானது தெய்வம் நாற, Deivam Naara - திவ்யமான பரிமளத்தை வீசிக்கொண்டு வரும், Varum - வந்து உலாவப்பெற்ற திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான் |