திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1839 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1839பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய துக்கங்களை எல்லாம் போக்குகைக்காக பிராட்டிமாரோடே கூட ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 2
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம் தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே –9-10-2
பதவுரை Show / Hide
எவ்வம் நோய் தவிர்ப்பான், Evvam Noi Thavirppaan - துக்கஹேதுவான வியாதிகளை நீக்கியருள்பவனும்
எமக்கு இறை, Emakku Irai - எமக்குவகுத்த ஸ்வாமியும்
இன் நகை துவர் வாய் நிலம் மகள், In Nakai Thuvar Vaai Nilam Magal - இனிய புன்சிரிப்பையும் சிவந்த அதரத்தையுமுடையளான பூமிப்பிராட்டியினுடைய
செல்வி, Selvi - அழகை
தோய வல்லான், Thoya Vallaaan - அநுபவிக்கவல்லவனும்
திரு மா மகட்கு இனியான், Thiru Maa Makadku Iniyaan - பெரிய பிராட்டியார்க்கு போக்யனுமான எம்பெருமான்
வண்டு ஆடும், Vandu Aadum - வண்டுகள் சுழலமிடாநிற்கப் பெற்ற
மௌவல் மாலையோடும், Mauval Maalaiyodum - சாதிமல்லிகைப் பூக்களோடும்
மல்லிகை மாலையோடும், Mallikai Maalaiyodum - மல்லிகைப் பூக்களோடும்
அணைந்த, Anaindha - ஸம்பந்தித்த
மாருதம், Maarudham - காற்றானது
தெய்வம் நாற, Deivam Naara - திவ்யமான பரிமளத்தை வீசிக்கொண்டு
வரும், Varum - வந்து உலாவப்பெற்ற
திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான்