| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 184 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 3 | மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய் பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7-3 | மச்சொடு மாளிகை ஏறி, Machodu maalikai eri - நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய் மாதர்கள் தம் இடம் புக்கு, Maadhargal tham idam pukku - பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து கச்சொடு, Kachodu - (அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும் பட்டை, Pattai - பட்டாடைகளையும் கிழித்து, Kizhithu - கிழித்து விட்டு காம்பு துகில் அவை, Kaambu thugil avai - (மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும் கீறி, Keeri - கிழித்துப் போட்டு நிச்சலும், Nichalum - (இப்படியே) ப்ரதி நித்யம் தீமைகள், Theemaigal - துஷ்ட சேஷ்டைகளை செய்வாய், Seyvaai - செய்பவனே! நீள் திருவேங்கடத்து, Neel thiruvenkatathu - உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற எந்தாய், Endhaay - ஸ்வாமியே! பச்சை, Pachai - பசு நிறமுள்ள தமனகத்தோடு, Thamanakathodu - மருக்கொழுந்தையும் பாதிரிப்பூ, Paathirippoo - பாதிரிப்பூவையும் சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |