Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 184 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
184பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 3
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7-3
மச்சொடு மாளிகை ஏறி, Machodu maalikai eri - நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய்
மாதர்கள் தம் இடம் புக்கு, Maadhargal tham idam pukku - பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து
கச்சொடு, Kachodu - (அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும்
பட்டை, Pattai - பட்டாடைகளையும்
கிழித்து, Kizhithu - கிழித்து விட்டு
காம்பு துகில் அவை, Kaambu thugil avai - (மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும்
கீறி, Keeri - கிழித்துப் போட்டு
நிச்சலும், Nichalum - (இப்படியே) ப்ரதி நித்யம்
தீமைகள், Theemaigal - துஷ்ட சேஷ்டைகளை
செய்வாய், Seyvaai - செய்பவனே!
நீள் திருவேங்கடத்து, Neel thiruvenkatathu - உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய், Endhaay - ஸ்வாமியே!
பச்சை, Pachai - பசு நிறமுள்ள
தமனகத்தோடு, Thamanakathodu - மருக்கொழுந்தையும்
பாதிரிப்பூ, Paathirippoo - பாதிரிப்பூவையும்
சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய்