திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1841 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டியோடு ஒக்க ருத்ரனுக்கும் திரு மேனி யிலே இடம் கொடுத்த சீலவான் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 4 | ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும்
தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே –9-10-4 | பதவுரை Show / Hideஏறு ஏறி, Eru Eri - விருஷயத்தை வாஹனமாகக்கொண்டு ஏறியிருப்பவனும் இலங்கும் ஒன் மழு பற்றும், Ilankum On Mazhu Patrum - விளங்குகின்ற அழகிய மபுவாயுதத்தைக் கையிலேந்திக் கொண்டிருப்பவனுமான ஈசற்கு, Eesarku - சிவபிரானுக்கு இசைந்து, Isainthu - திருவுள்ளமிணங்கி உடம்பில் ஓர் கூறு, Udamil Oru Kooru - தனது திருமேனியில் ஒரு பாகத்தை இருப்பிடமாகக் கொடுத்தருளினவனும் குலம், Kulam - சிறந்த மா மகட்கு, Maa Makadku - பெரியபிராட்டியார்க்கு இனியான், Iniyaan - போக்யனுமான எம்பெருமான் இன் இன வண்டு, In Ina Vandu - இனிய இளவண்டுகளானவை நாறு, Naaru - மணம்மிக்க செண்பகம், Senbagam - செண்பகப்பூவையும் மல்லிகை மலர், Mallikai Malar - மல்லிகைப்பூவையும் புல்கி, Pulki - தழுவி நல் நறு தேறல், Nal Naru Therhal - நல்லமணமுள்ள தேனிலை வாய் மடுக்கும், Vai Madukkum - வாய்வைத்துப் பருகுமிடமான திருக்கோட்டியூரான், Thirukkoottiyooran - திருக்கோட்டியூரிலுள்ளான். |