திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1843 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் மிடுக்கை அழித்த ஸ்ரீ தசராத்மாஜன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 6 | காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்
நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத்
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே –9-10-6 | பதவுரை Show / Hideகாவலன், Kavalank - ‘நானே ஜகத்ரக்ஷகன்’ என்று அஹங்காரங்கொண்டிருந்த (- (எவ்விடத்திலுள்ளானென்னில்)) இலங்கைக்கு இறை, Ilangaikku Irai - லங்காதிபதியான இராவணன் கலங்க, Kalanga - முடியும்படியாக சரம், Saram - பாணங்களை அவன், Avaan - அவ்விராவணனுடைய ஏவலம், Evalam - பாணப்ரயோக ஸாமர்த்தியத்தை தவிர்த்தான், Thavirthaan - தொலைத்தவனும் என்னை ஆளுடை, Ennai Aaludai - என்னை அடிமைகொண்டருளினவனுமான எம்பிரான், Embiraan - எம்பெருமான் நாவலம் புவி மன்னர், Naavalam Puvi Mannar - ஜம்பூத்வீபத்திலுள்ள அரசர்கள் மால் இங்கு உறைகின்றது என வந்து, Maal Ingu Uraikindrathu En Vandu - ‘எம்பெருமான் இவ்விடத்தில் நித்யஸந்நிதி பண்ணியிருக்கிறான்’ என்று தெரிந்துவந்து வணங்க, Vananga - ஆச்ரயிக்க தேவர், Thevar - பிரமன் முதலிய தேவர்களும் வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்கப்பெற்ற திருக்கோட்டி யூரான், Thirukkoatti Yooran - திருக்கோட்டியூரிலுள்ளான். |