திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1843 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1843பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் மிடுக்கை அழித்த ஸ்ரீ தசராத்மாஜன் இப்போது ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 6
காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான் நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத் தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே –9-10-6
பதவுரை Show / Hide
காவலன், Kavalank - ‘நானே ஜகத்ரக்ஷகன்’ என்று அஹங்காரங்கொண்டிருந்த (- (எவ்விடத்திலுள்ளானென்னில்))
இலங்கைக்கு இறை, Ilangaikku Irai - லங்காதிபதியான இராவணன்
கலங்க, Kalanga - முடியும்படியாக
சரம், Saram - பாணங்களை
அவன், Avaan - அவ்விராவணனுடைய
ஏவலம், Evalam - பாணப்ரயோக ஸாமர்த்தியத்தை
தவிர்த்தான், Thavirthaan - தொலைத்தவனும்
என்னை ஆளுடை, Ennai Aaludai - என்னை அடிமைகொண்டருளினவனுமான
எம்பிரான், Embiraan - எம்பெருமான்
நாவலம் புவி மன்னர், Naavalam Puvi Mannar - ஜம்பூத்வீபத்திலுள்ள அரசர்கள்
மால் இங்கு உறைகின்றது என வந்து, Maal Ingu Uraikindrathu En Vandu - ‘எம்பெருமான் இவ்விடத்தில் நித்யஸந்நிதி பண்ணியிருக்கிறான்’ என்று தெரிந்துவந்து
வணங்க, Vananga - ஆச்ரயிக்க
தேவர், Thevar - பிரமன் முதலிய தேவர்களும்
வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்கப்பெற்ற
திருக்கோட்டி யூரான், Thirukkoatti Yooran - திருக்கோட்டியூரிலுள்ளான்.