திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1847 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1847பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்களுக்கு ஸ்ரீபரமபதமே வாசஸ் ஸ்தானம் என்கிறார்) 10
ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில் சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந் நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –9-10-10
பதவுரை Show / Hide
ஆலும் மா வலவன், Aalum Maa Valavan - ஆடல்செய்நின்ற குதிரையை ஏறிச்செலுத்துதலில் ஸமர்த்தரும்
மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்,
அணி யொழில், Ani Yozhil - அழகிய சோலைகளையும்
சேல்கள் பாய் கழனி, Selgal Pai Kazhani - மீன்கள் துள்ளிவிளையாடுகின்ற கழனிகளையுமுடைத்தான
திருக்கோட்டி யானை, Thirukkoatti Yaanai - திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருப்பவனும்
முகில் வண்ணனை, Mugil Vannana - மேகம்போன்ற நிறத்தை யுடையவனும்
நெடு மாலை, Nedu Maalai - (அடியார்திறத்தில்) அதிகமான வியாமோஹத்தை யுடையனுமான எம்பெருமானை
இன் தமிழால், In Tamizhal - இனிய தமிழ்ப்பாசுரங்களைக் கொண்டு
நினைத்த, Ninaiththa - சிந்தித்த
இ நாலும் ஆறும், I Naalum Aarum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
வான் உலகு, Vaan Ulagu - பரமபதம்
இடம் ஆகும், Idam Aakum - இருப்பிடமாகும்