திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1847 | பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்களுக்கு ஸ்ரீபரமபதமே வாசஸ் ஸ்தானம் என்கிறார்) 10 | ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –9-10-10 | பதவுரை Show / Hideஆலும் மா வலவன், Aalum Maa Valavan - ஆடல்செய்நின்ற குதிரையை ஏறிச்செலுத்துதலில் ஸமர்த்தரும் மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார், அணி யொழில், Ani Yozhil - அழகிய சோலைகளையும் சேல்கள் பாய் கழனி, Selgal Pai Kazhani - மீன்கள் துள்ளிவிளையாடுகின்ற கழனிகளையுமுடைத்தான திருக்கோட்டி யானை, Thirukkoatti Yaanai - திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருப்பவனும் முகில் வண்ணனை, Mugil Vannana - மேகம்போன்ற நிறத்தை யுடையவனும் நெடு மாலை, Nedu Maalai - (அடியார்திறத்தில்) அதிகமான வியாமோஹத்தை யுடையனுமான எம்பெருமானை இன் தமிழால், In Tamizhal - இனிய தமிழ்ப்பாசுரங்களைக் கொண்டு நினைத்த, Ninaiththa - சிந்தித்த இ நாலும் ஆறும், I Naalum Aarum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு வான் உலகு, Vaan Ulagu - பரமபதம் இடம் ஆகும், Idam Aakum - இருப்பிடமாகும் |