திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1848 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு பிராப்ய பூமியைத் தருவானாய் தானே பிராப்யன் ஆனவனை திரு நீர் மலையிலே கண்டோம் இனி திருக் கண்ண மங்கையிலே காணக் கடவோம் – என்கிறார்) 1 | ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1 | பதவுரை Show / Hideஒரு நல் சுற்றம், Oru Nal Suttam - அத்விதீய விலக்ஷண பந்துவாய் எனக்கு உயிர், Enakku Uyir - எனக்கு ஆத்மாவாய் ஒண் பொருள், On Porul - சிறந்த பெருளாயிருப்பவனாய் வருநல் தொல் கதி ஆகிய, Varunal Thol Kathi Aagiya - மேல்வரப் போகிற நல்லப்ராய்ய பூமியும் தானேயா யிருப்பவனான மைந்தனை, Mainthanai - நித்ய்யுவாலான பெருமானை நெருநெல், Nerunel - நேற்று கண்டது, Kandathu - ஸேவித்தது நீர்மலை, Neermalai - திருநீர்மலையிலே இன்று, Indru - இன்றைக்கோ வென்னில், கரு நெல் சூழ், Karunel Soozh - கருவடைந்த பயிர்களால் சூழப்பட்ட கண்ணமங்கையுள், Kannamangaiyul - திருக்கண மங்கையிலே போய் காண்டும், Poi Kaandum - சென்று ஸேவிப்போம் |