திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1848 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1848பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு பிராப்ய பூமியைத் தருவானாய் தானே பிராப்யன் ஆனவனை திரு நீர் மலையிலே கண்டோம் இனி திருக் கண்ண மங்கையிலே காணக் கடவோம் – என்கிறார்) 1
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள் வரு நல் தொல் கதியாகிய மைந்தனை நெருநல் கண்டது நீர் மலை இன்று போய் கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1
பதவுரை Show / Hide
ஒரு நல் சுற்றம், Oru Nal Suttam - அத்விதீய விலக்ஷண பந்துவாய்
எனக்கு உயிர், Enakku Uyir - எனக்கு ஆத்மாவாய்
ஒண் பொருள், On Porul - சிறந்த பெருளாயிருப்பவனாய்
வருநல் தொல் கதி ஆகிய, Varunal Thol Kathi Aagiya - மேல்வரப் போகிற நல்லப்ராய்ய பூமியும் தானேயா யிருப்பவனான
மைந்தனை, Mainthanai - நித்ய்யுவாலான பெருமானை
நெருநெல், Nerunel - நேற்று
கண்டது, Kandathu - ஸேவித்தது
நீர்மலை, Neermalai - திருநீர்மலையிலே
இன்று, Indru - இன்றைக்கோ வென்னில்,
கரு நெல் சூழ், Karunel Soozh - கருவடைந்த பயிர்களால் சூழப்பட்ட
கண்ணமங்கையுள், Kannamangaiyul - திருக்கண மங்கையிலே
போய் காண்டும், Poi Kaandum - சென்று ஸேவிப்போம்