| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 185 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - நீ தெருவிலே நின்று அவ் விடத்தில் விளையாடுகின்ற சிறிய இடைப் பெண்களைத் தீம்பு செய்து திரியாமல் மருவையும் தமனகத்தையுஞ் சேர்த்துக் கட்டின மணம் வீசுகின்ற மாலையை அந்த மணம் பழுது படாதபடி சூடிக்கொள்ள வா என்கிறாள். எம்பெருமானுக்கு ஏற்ற உவமைப் பொருள் கிடையாமையால் “புருவங் கருங்குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று” என இல் பொருளுவமை கூறப்பட்டது. கமழ்கின்ற – ‘அன்’ சாரியை பெறாத முற்று 4 | தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2-7-4 | புருவம், Puruvam - புருவங்களையும் கரு குழல், Karu kuzhal - கரு நிறமான கூந்தலையும் நெற்றி, Nettri - (இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு பொலிந்த, Polindha - விளங்குகின்ற முகில் கன்று போலே, Mugil kanru pole - மேகக் கன்று போலே உருவம் அழகிய, Uruvam azhagiya - வடிவமழகிய நம்பி, Nambi - சிறந்தோனே! (நீ) தெருவின் கண் நின்று, Theruvin kan nindru - தெருவிலே நின்று கொண்டு இள ஆய்ச்சி மார்களை, Ila aaychi maargalai - இடைச் சிறுமிகளை தீமை செய்யாதே, Theemai seyaadhe - தீம்பு செய்யாமலிரு; மருவும், Maruvum - மருவையும் தமனகமும், Thamanakamum - தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின) சீர் மாலை, Seer maalai - அழகிய மாலைகள் மணம் கமழ்கின்ற, Manam kamazhgindra - வாஸனை வீசுகின்றன; இவை, Ivai - இவற்றை உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |