Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 185 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
185பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 4
தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே
மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே
உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2-7-4
புருவம், Puruvam - புருவங்களையும்
கரு குழல், Karu kuzhal - கரு நிறமான கூந்தலையும்
நெற்றி, Nettri - (இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு
பொலிந்த, Polindha - விளங்குகின்ற
முகில் கன்று போலே, Mugil kanru pole - மேகக் கன்று போலே
உருவம் அழகிய, Uruvam azhagiya - வடிவமழகிய
நம்பி, Nambi - சிறந்தோனே! (நீ)
தெருவின் கண் நின்று, Theruvin kan nindru - தெருவிலே நின்று கொண்டு
இள ஆய்ச்சி மார்களை, Ila aaychi maargalai - இடைச் சிறுமிகளை
தீமை செய்யாதே, Theemai seyaadhe - தீம்பு செய்யாமலிரு;
மருவும், Maruvum - மருவையும்
தமனகமும், Thamanakamum - தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின)
சீர் மாலை, Seer maalai - அழகிய மாலைகள்
மணம் கமழ்கின்ற, Manam kamazhgindra - வாஸனை வீசுகின்றன;
இவை, Ivai - இவற்றை
உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு
சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய்