| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 185 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 4 | தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமை செய்யாதே மருவும் தமநகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய் -2-7-4 | புருவம், Puruvam - புருவங்களையும் கரு குழல், Karu kuzhal - கரு நிறமான கூந்தலையும் நெற்றி, Nettri - (இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு பொலிந்த, Polindha - விளங்குகின்ற முகில் கன்று போலே, Mugil kanru pole - மேகக் கன்று போலே உருவம் அழகிய, Uruvam azhagiya - வடிவமழகிய நம்பி, Nambi - சிறந்தோனே! (நீ) தெருவின் கண் நின்று, Theruvin kan nindru - தெருவிலே நின்று கொண்டு இள ஆய்ச்சி மார்களை, Ila aaychi maargalai - இடைச் சிறுமிகளை தீமை செய்யாதே, Theemai seyaadhe - தீம்பு செய்யாமலிரு; மருவும், Maruvum - மருவையும் தமனகமும், Thamanakamum - தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின) சீர் மாலை, Seer maalai - அழகிய மாலைகள் மணம் கமழ்கின்ற, Manam kamazhgindra - வாஸனை வீசுகின்றன; இவை, Ivai - இவற்றை உகந்து, Ugandhu - மகிழ்ச்சி கொண்டு சூட்ட வாராய், Soota vaaraay - (நான்) சூட்டும்படி வாராய் |