திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1850 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1850பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வடதள சாயி யானவனை திருவாலியிலே கண்டோம் – இனி ஸ்ரீ திரு நாங்கூரிலே சென்று காணக் கடவோம் என்கிறார்) 3
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை யாரமுதினைப் பைந்துழாய் மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய் ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே –10-1-3
பதவுரை Show / Hide
வேலை, Velai - (பிரளயக்) கடலிலே
ஆல் இலை, Aal Ilai - ஆலந்தளிரிலே
பள்ளி விரும்பிய, Palli Virumbiya - திருக்கண் துயில்வதை உகந்தருளினவனும்
பாலை, Paalai - பால்போன்றவனும்
ஆர் அமுதத்தினை, Aar Amudaththinai - அருமையான அமிருதம் போன்றவனும்
பைந்துழாய், Painthuzhai - பசுமைதங்கிய திருத்துழாயை யுடையவனும்
ஞாலம் உன்னியை, Njaalam Unniyai - உலகத்தவர்களெல்லாராலும் தியானிக்கப்படுபவனுமான
மாலை, Maalaik - ஸர்வேச்வரனை
ஆலியில் கண்டு மகிழ்ந்து, Aaliil Kandu Makizhndhu - திருவாலியில் ஸேவித்து ஆநந்தித்து
நாங்கூரிலே போய் காண்டும், Naangoorile Poi Kaandum - திருநாங்கூரிலே சென்று ஸேவிப்போம்.