திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1851 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ப்ரஹ்லதா ஆழ்வானுக்கு விரோதியான ஹிரண்யனை போக்கினவனை ஸ்ரீ திருப் பேரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு வெள்ளறையிலே காணக் கடவோம் என்கிறார்) 4 | துளக்கமில் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே –10-1-4 | பதவுரை Show / Hideதுளக்கம் இல் சுடரை, Thulakkam Il Sudarai - ஒன்றாலும் அழிதலில்லாத ஒளியையுடையவனும் அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அஸுரனுடைய உடல், Udal - உடம்பை பிளக்கும், Pilakkum - பிளந்தொழித்த மைந்தனை, Mainthanai - மிடுக்கையுடையவனும் அளப்பு இல் ஆர் அமுதை, Alappu Il Aar Amudhai - அளவிடுதலில்லாத போக்யதையை யுடைத்தான அமிருதம் போன்றவனும் அமரர்க்கு அருள் விளக்கினை, Amararukku Arul Vilakkinai - நித்யஸூரிகளுக்கு அருள் செய்கின்ற விளக்குப் போன்றவனுமான பெருமானை பேரில், Peril - திருப்பேர் நகரில் வணங்கிப்போய், Vanangippoy - ஸேவித்து வெள்ளறை, Vellarai - திருவெள்ளறையிலே சென்று காண்டும், Sendru Kaandum - சென்று தொழுவோம் |