திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1853 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரயோஜனாந்த பரருக்கும் அபேஷிதம் செய்யும் பரம உதாரனை ஸ்ரீ திருச் சேறையிலே கண்டோம் இனி ஸ்ரீ திருக் குடந்தையிலே காணக் கடவோம் என்கிறார்) 6 | வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6 | பதவுரை Show / Hideவானையார், Vaanaiyaar - வானுலகத்திலுள்ளார்க்கு அமுதம் தக்க, Amudham Thakka - அமுதமெடுத்தளித்த வள்ளலை, Vallalai - உதாரனும், தேனை, Thenai - தேன்போல இனியவனும் ஆனை, Aanaik - (குவலயாபீடமென்கிற) யானையை வாட்டி அருளும், Vaatti Arulum - கொன்றொழித்தவனும் அமரர்தம் கோனை, Amarartham Konai - நித்யஸூரிகளுக்கு நியாமகனுமான எம்பெருமானை யாம், Yaam - அடியோம் நீள் வயல் சேறையில், Neel Vayal Seraiyil - நீண்டவயல்களை யுடைத்தான திருச்சேறையில் கண்டுபோய், Kandupoy - ஸேவித்து குடந்தை, Kudanthai - திருக்குடந்தையிலே சென்று காண்டும், Sendru Kaandum - போய்ஸேவிப்போம். |