திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1855 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1855பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் திருவடிகளிலே நல்லாருக்கு ஆத்மாவனவனை ஸ்ரீ தெற்குத் திருமலையிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு விண்ணகரிலே காணக் கடவோம் என்கிறார்) 8
பத்தராவியைப் பான்மதியை யணித் தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய் முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8
பதவுரை Show / Hide
பத்தர் ஆவியை, Pathar Aaviyai - பக்தர்களுக்கு ஆத்மாவாக வுள்ளவனும்
பால் மதியை, Paal Mathiyai - களங்கமற்ற சந்திரனைப் போல அழகியவனும்
அணி தொத்தை, Ani Thothai - ஆபரணமாலை போன்றவனும்
முத்தினை, Muththinai - முத்துப்போன்றவனும்
மணியை, Maniyai - நீலமணிபோன்றவனும்
மணி மாணிக்கம், Mani Manikkam - சிறந்த மாணிக்கம் போன்றவனும்
வித்தினை, Viththinai - ஜகத்காரண பூகனுமான எம்பெருமானை
மாலிருஞ்சோலை, Maliruncholai - திருமாலிருஞ்சோலையில்
போய் தொழுது, Poi Thozhudhu - சென்று பணிந்து
விண்ணகர், Vinnagar - திருவிண்ணகரிலே
சென்று காண்டும், Sendru Kaandum - போய் ஸேவிப்போம்