Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 186 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
186பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 5
புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் 2-7-5
புள்ளினை, Pullinai - பகாஸுரனை
வாய் பிளந்திட்டாய், Vai pilandhittai - வாய் கிழித்துப் பொகட்டவனே!
பொரு, Poru - யுத்தோந்முகமான
கரியின், Kariyin - குவலயாபீடத்தின்
கொம்பு, Kombu - கொம்பை
ஒசித்தாய், Osithaai - பறித்தவனே!
கள்ளம் அரக்கியை மூக்கொடு, Kallam arakkiyai mookodu - வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும்
காவலனை, Kaavalanai - (அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய
தலை, Thalai - தலையையும்
கொண்டாய், Kondai - அறுத்தவனே!
நீ, Nee - (இப்படிப்பட்ட) நீ
வெண்ணெய், Vennai - வெண்ணெயை
அள்ளி விழுங்க, Alli vizhungu - வாரி விழுங்க
அஞ்சாது, Anjaadhu - சிறிதும் பயப்படாமல்
அடியேன், Adiyen - (‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான்
அடித்தேன், Adithen - அடித்தேன்; (அப் பிழையைப் பொறுத்து)
தெள்ளிய, Thelliya - தெளிவான
நீரில், Neeril - நீரிலே
எழுந்த, Ezundha - உண்டான
செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீரை
சூட்டவாராய், Sootavaaraay - (நான்) சூட்டும்படி வாராய்