திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1860 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1860பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிரபதாரரைக் கொல்லாத இஷ்வாகு வம்சத்திலே பிறந்ததுக்கு தலை யன்றோ நீர்-விஷய ப்ரவணராய் கெடக் கடவ இஜ் ஜாதியை எத்தைச் சொல்லுவது-ஸ்வர்க்கத்துக்கு வன்னியம் அறுத்தவன் மகனே உனக்கு இஷ்டரான தேவர்கள் உகந்ததுவே செய்து விட்டாய் – அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ) 3
தண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத் தகவிலி எங்கோமான் கொண்டு போந்து கெட்டான் எமக்கு இங்கோர் குற்றமில்லை கொல்லேல் குலவேந்தே பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப் பேசுகின்றது என் தாசரதீ உன் அண்ட வாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-3
பதவுரை Show / Hide
குலம் வேந்தே, Kulam Vendee - (குற்றமற்றவர்களைத் தண்டியாத இக்ஷ்வாகுவின்) வம்சத்துக்குத் தலைவரே! (- (அக்குற்றங்காரணமாக) (ஆகையாலே) (அஞ்சினோம், தடம் பொங்கத்தம் பொங்கோ.))
தாசரதீ, Thaasarathii - ஸ்ரீராமபிரானே!
தகவு இலி எம்கோமான், Thagavu Ili Emkoman - ஈர்நெஞ்சு இல்லாதவனாய் எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணன்
அன்று, Anru - (நீங்கள் வனத்திலே தாபஸராயிருந்த) அக்காலத்திலே
தண்டகாரணியம் புகுந்து, Thandakaraniyam Pugunthu - தண்டகாரணியத்தில் பிரவேசித்து
தையலை, Thailai - அழகிற்சிறந்த பிராட்டியை
கொண்டு போந்து, Kondhu Ponthu - அபஹரித்து வந்து
எமக்கு, Emakku - எங்களுக்கு
ஓர் குற்றம் இல்லை, Or Kuttram Illai - ஒரு குற்றமும் கிடையாது
கொல்லேல், Kollel - (எங்களைக்) கொல்லா தொழியவேணும்
பெண்டிரால் கெடும், Pendiraal Kedum - ஸ்த்ரீசாபல்யங் காரணமாகக் கெட்டுப்போகின்ற
இக் குடி தன்னை, Ik Kudi Thannai - இந்த ராக்ஷஸஜாதியைப் பற்றி
பேசுகின்றது என், Pesugindrathu En - பேசலாவது என்ன இருக்கிறது?
உன் அண்ட வாணர், Un Anda Vaanar - தேவரீருக்கு இஷ்டரான தேவதைகள்
உகப்பதே, Ugappadhe - ஸந்தோஷிக்கக்கூடிய காரியத்தையே
செய்தாய், Seithai - செய்தருளினீர்,