திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1864 | பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அப்ராப்த விஷயத்தில் சாபலத்தை பண்ணுமவனை – நான் இவ்வூர்க்கு அதிபதி -நிர்வாஹகன் என்று இது ஒன்றுமையே நினைத்து இருந்தான் – குற்றம் நின்ற இடத்தே வதம் பண்ணப் பார்த்தருள வேணும் – நாங்கள் அறியாமல் கொலை உண்டோம் ஆகாமல் சொன்னோம் – தடம் பொங்கத்தம் பொங்கோ) 7 | தாழமின்றி முந்நீரை யஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதியின் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை எங்களை யொழியக் கொலையவனைச்
சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-7 | பதவுரை Show / Hideமா மணி வண்ணா, Maa Mani Vanna - நீலமணிநிறத்தனாவ பெருமானே! (- (தடம் பொங்கத்தம் பொங்கோ)) தாழம் இன்றி, Thaalam Inri - காலதாமதமில்லாமல் முந்நீரை, Munnirai - கடலை அஞ்ஞான்று, Anjjaantru - அன்றைக்கு தகைந்ததே கண்டு, Thakainthadhe Kandu - அணைசெய்த்தொன்றையே கண்டு, வஞ்சி நுண் மருங்குல், Vanchi Nun Marungul - வஞ்சிக்கொடி போன்று நுட்பமான இடையை யுடையளாய் மாழை மான் மட நோக்கியை, Maazhai Maan Mada Nokkikie - பேதைமைக்குணமுள்ள மானின்பார்வை போன்ற கபட மற்ற கண் பார்வையை யுடையளான ஸீதையை விட்டு, Vittu - (தேவரீர் ஸந்நிதியிலே) ஸமர்ப்பித்துவிட்டு இலங்கைக்கு இறை தன்னை அவனை, Ilangaikku Irai Thannai Avanai - அந்த இராவணனை எங்களை ஒழிய கொலை, Engalai Ozhiy Kolai - எங்களைத் தவிர்த்துக் கொல்லவேணும் சூழும் ஆ நினை, Soolum Aa Ninai - அடியோங்கள் தேவரிரைச் சூழ்ந்துக்கொண்டு பிரார்த்திக்கிறவிதனைத் திருவுள்ளம் பற்றவேணும் சொல்லினோம், Sollinom - எங்கள் கோரிக்கையை விண்ணப்பஞ்செய்து கொண்டோம் |