திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1867 | பெரிய திருமொழி || (10-2–இரக்கமின்றி) (பொங்கத்தம் பொங்கோ) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தொண்டீர் -அந்த ராஷசர்கே கண்ட பாசுரம் அன்று இது-ஜிதந்தே -என்றால் -எல்லாருக்கும் சொல்ல வேணும் இறே- இச் சரீர அநந்தரம் இருக்கும் இடம் ஸ்ரீ பரம பதம் –அது தான் அனுபவத்தால் அறிந்து கொள்ளும் அத்தனை – எல்லாரும் அறியச் சொன்னோம்) 10 | அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை யழித்தவன் தன்னைப்
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ்வுலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடரில்லை இறந்தால்
தங்குமூர் அண்டமே கண்டு கொண்மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-10 | பதவுரை Show / Hideதொண்டீர், Thondir - பகவத் பக்தர்களே!, (- (இது செய்தால்)) அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர, Angu Vaanavarkku Aakulam Theera - தேவலோகத்திலுள்ள தேவதைகளின் மனக்குழப்பம் தீரும்படி அணி இலங்கை அழித்தவன் தன்னை, Ani Ilangai Azhithavan Thannai - அழகிய லங்காபுரியை அழித்தருளின பெருமான் விஷயமாக, பொங்குமா வலவன் கலிகன்றி, Pongumaa Valavan Kalikanri - கிளர்த்தியையுடைய ‘ஆடல்மா’ என்னுங் குதிரையை நடத்த வல்லவரான ஆழ்வார் புகன்ற, Pugandra - அருளிச்செய்த பொங்கத்தம் கொண்டு, Pongattham Kondo - ‘பொங்கத்தம் பொங்கோ’ என்ற இந்த வெற்றியைப் பாசுரங்களைக் கொண்டு இ உலகினில், I Ulaginil - இவ்விபூதியிலே எங்கும், Engum - எல்லாவிடங்களிலும் பாடி நின்று ஆடுமின், Paadi Nindru Aadumin - பாடிக்கொண்டு கூத்தாடுங்கள், இம்மையே இடல் இல்லை, Immaye Idal Illai - (உங்கட்கு) இப்பிறவியில் ஒருவகைத்துன்பமு முண்டாகாது, இறந்தால், Irandhaal - மரணமானபின்பு தங்கும் ஊர், Thangum Oor - நீங்கள் போய்ச்சேர்ந்து நிலை நிற்குமிடம் அண்டமே, Andame - பரமபதமேயாம், கண்டு கொண்மின், Kandu Konmin - (இதனை அநுபவத்தாலே) கண்டு கொள்ளுங்கள் சாற்றினோம், Saatrinom - இஃது எல்லாருமறியச்சொன்னோம் தடம் பொங்கத்தம் பொங்கோ, Thadam Pongatham Pongoo - வெற்றியோ வெற்றி |