திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1868 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ சுக்ரீவா ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி ஏத்துவாருக்கு உம்மை ஆஸ்ரயிக்க வேணும் இறே – அவர் இசைந்தாலும் -வத்த்யதாம் -என்று நீர் சொன்னால் உம்மை இசைப்பித்து -ஆனய -என்று உம்மை விட்டு அழைப்பித்துக் கைக் கொள்ள வேண்டுகையாலே – ஸ்ரீ ராஜாவோடு வார்த்தை சொல்லுகிறவர்கள் என்று ஸ்ரீ முதலிகள் கொல்லாதபடி -என்கிறார்கள் – பண்டே சிஷித்து வைத்தவர்கள் போலே ஆடுகின்றோம்-எங்கள் செயல் அறுதியாலே) 1 | ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1 | பதவுரை Show / Hideஇராமன், Iraman - இராமபிரானுடைய திருநாமம், Thirunamam - திருநாமங்களை நா தழும்ப, Na Thazhumba - நாக்குத் தடிக்கும்படி எத்துகின்றோம், Eththukindrom - வாயாரச்சொல்லித் துதிக்கின்றோம். நம்பீ சுக்கிரீவா, Nambi Chukkrivaa - ஸுக்ரீவமஹாராஜரே! சோத்தம், Soththam - இதோ அஞ்ஜலி உம்மை தொழுகின்றோம், Ummalai Thozhugindrom - உம்மைத் திருவடிகளில் விழுந்து வணங்குகின்றோம் உங்கள் வானரம், Ungal Vaanaram - நீங்களிட்ட வழக்காயிருக்கின்ற வானரவீரர்கள் எம்மை கொல்லாமே, Emmai Kollame - எங்களைக் கொல்ல நினையாதபடி வார்த்தை பேசீர், Vaarthai Pesir - ஒருவார்த்தையருளிச் செய்யவேணும் கூத்தர் போல, Koothar Pola - கூத்தாடக்கற்றவர்கள் போல குழமணிதூரம் ஆடுகின்றோம், Kuzhamanithuram Aadugindrom - உங்கள் வெற்றியும் எங்கள் தோல்வியுந்தோற்ற ஆடுகின்றோம் |