Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 187 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
187பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 6
எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய்
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2-7-6
நம்பி, Nambi - சிறந்தோனே!(நப்பின்னையை மணம் புணர்வதற்காக)
எருதுகளோடு, Erudhugalodu - ஏழு ரிஷபங்களுடன்
பொருதி, Poruthi - போர் செய்யா நின்றாய்;
ஏதும், Yedhum - எதிலும் (ஒன்றிலும்)
உலோபாய் காண், Ulopaai kaan - விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;(தேகம் பிராணன் பேணாமல்
கருதிய, Karuthiya - (கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த
தீமைகள், Theemaigal - தீம்புகளை
செய்த, Seydha - (நீ அவன் மேற்) செய்து
கம்ஸனை, Kamsanai - அந்தக் கம்ஸனை
கால் கொடு, Kaal kodu - காலினால் (காலைக் கொண்டு)
பாய்ந்தாய், Paainthaai - பாய்ந்தவனே!
தெருவின் கண், Theruvin kan - தெருவிலே(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது)

தீமைகள் செய்து, Theemaigal seydhu - தீமைகளைச் செய்து கொண்டு போய்
சிக்கென, Sikkenna - வலிமையாக
மல்லர்களோடு, Mallarkalodu - (சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே
பொருது வருகின்ற, Poruthu varugindra - போர் செய்து வந்த
பொன்னே, Ponne - பொன் போலருமையானவனே!
புன்னைப் பூ சூட்ட வாராய், Punnai poo sootta vaaraay - புன்னைப் பூ சூட்ட வாராய்