| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 187 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - பொருதி = முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று. (எருதுகளோடே பொருதது) காலாந்தரமாயிருக்கச் செய்தேயும் தற்காலம் போலே ப்ரகாசிக்கையாலே ‘பொருதி’ என்று வர்த்தமாகமாகச் சொல்லுகிறது என்ற பெரிய ஜீயர் உரை நோக்கத் தக்கது. உலோபாய் = வடமொழியின் திரிபாகிய ‘உலோபம்’ என்பதனடியாக வந்த எதிர்மறை முற்று. உடம்பைப் பேணுதல் உயிரைப் பேணுதல் ஒன்றும் செய்யாதிரா நின்றாய் என்று கருத்து. போம் வழியில் வண்ணானைக் கொன்று வஸ்த்ரங்களைப் பறித்துக் கொண்டமை கம்ஸனுடைய வில்லை முறித்தமை குவலயாபீடத்தைக் கொன்றமை முதலியன – இங்கு தெருவின் கண் செய்த தீமைகளாகும். கண் – ஏழனுருபு. 6 | எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால் கொடு பாய்ந்தாய் தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூ சூட்ட வாராய் -2-7-6 | நம்பி, Nambi - சிறந்தோனே!(நப்பின்னையை மணம் புணர்வதற்காக) எருதுகளோடு, Erudhugalodu - ஏழு ரிஷபங்களுடன் பொருதி, Poruthi - போர் செய்யா நின்றாய்; ஏதும், Yedhum - எதிலும் (ஒன்றிலும்) உலோபாய் காண், Ulopaai kaan - விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;(தேகம் பிராணன் பேணாமல் கருதிய, Karuthiya - (கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த தீமைகள், Theemaigal - தீம்புகளை செய்த, Seydha - (நீ அவன் மேற்) செய்து கம்ஸனை, Kamsanai - அந்தக் கம்ஸனை கால் கொடு, Kaal kodu - காலினால் (காலைக் கொண்டு) பாய்ந்தாய், Paainthaai - பாய்ந்தவனே! தெருவின் கண், Theruvin kan - தெருவிலே(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது) தீமைகள் செய்து, Theemaigal seydhu - தீமைகளைச் செய்து கொண்டு போய் சிக்கென, Sikkenna - வலிமையாக மல்லர்களோடு, Mallarkalodu - (சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே பொருது வருகின்ற, Poruthu varugindra - போர் செய்து வந்த பொன்னே, Ponne - பொன் போலருமையானவனே! புன்னைப் பூ சூட்ட வாராய், Punnai poo sootta vaaraay - புன்னைப் பூ சூட்ட வாராய் |