திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1870 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல-உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் – எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ – கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ) 3 | ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கருமுகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3 | பதவுரை Show / Hideஞாலம் ஆளும், Njaalam Aalum - பூமியை யெல்லாம் ரக்ஷித்தருள்பவராய் (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.)) உங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்கு ஸ்வாமியான ஸ்ரீராமபிரான் எங்கள் இராவணற்கு, Engal Iraavanarku - எங்களுக்குத் தலைவனாயிருந்த இராவணனுக்கு காலன் ஆகி வந்த ஆ கண்டு, Kaalan Aagi Vantha Aa Kandu - ம்ருத்யுவாக வந்தபடியைப் பார்த்து அஞ்சி, Anji - பயப்பட்டு, கரு முகில் போல், Karum Mukhil Pola - ;காளமேகம் போன்ற நீலன் வாழ்க, Neelan Vazhga - நீலன் வாழவேணும், சுடேணன் வாழ்க, Sudhenan Vazhga - ஸுஷேணன் வாழவேணும் அங்கதன் வாழ்க, Angathan Vazhga - அங்கதன் வாழவேணும் என்று, Endru - என்று ஒவ்வொருவர்க்கும் பல்லாண்டுபாடிக்கொண்டு கோலம் ஆக, Kolam Aaga - அழகாக |