திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1871 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1871பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான வில்லிலே அம்பைத் தொடுத்த ஸ்ரீ பெருமாள் தம்பியார் உடைய குணங்கள் பாடி ஆடுகின்றோம்) 4
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதாரத்தைப் புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரிசிலையால் கணங்கள் யுண்ண வாளியாண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி யாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-4
பதவுரை Show / Hide
மணங்கள் நாறும் வார் குழலால் மாதர்கள், Manangal Naarum Vaar Kuzhalal Maatharhal - பரிமளம் மிக்க நீண்ட கூந்தளையுடையரான ஸ்த்ரீகள் விஷணத்திலே (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்.))
ஆதரத்தை புணர்ந்த சிந்தை, Aadharaththai Punarndha Sindhai - ஆசையை ஒருபோதும் விடாத நெஞ்சையுடையனாய்
புன்மை யாளன், Punmai Yalan - மிகவும் நீசனான இராவணன்
பொன்ற, Pondra - முடியும்படியாகவும்
கணங்கள் உண்ண, Kangal Unna - பிசாசுகள் ஏறிப் புசிக்கும்படியாகவும்
வரி சிலையால், Vari Silaiyal - அழகிய வில்வழியாக
வாளி ஆண்ட, Vaali Aanda - அம்புகளைப் பிரயோகித்த
காவலனுக்கு, Kaavalanukku - ஸர்வாக்ஷகரான பெருமாளுடைய
இளையோன், Ilaiyoan - திருத்தம்பியாரான லக்ஷ்மணருடைய
குணங்கள் பாடி, Gunangal Paadi - திருக்குணங்களைப் பாடிக்கொண்டு