திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1872 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்- நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே- எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம்) 5 | வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-5 | பதவுரை Show / Hideஎம்பெருமான் தமர்காள், Emperumaan Thamarkaal - ஸ்ரீராமபக்தர்களான வாநர வீரர்களே! (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்)) வென்றி தந்தோம், Vendri Thandhom - ஜயத்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டோம்! மானம் வேண்டாம், Maanam Vendaam - “நாங்களும் ஆண்பிள்ளைகள்” என்று கொண்டிருந்த அஹங்காரத்தைக் கைவிட்டிட்டோம். எங்கள் வாழ்நாள், Engal Vaazhnal - எங்களுடைய ஆயுளை எமக்கு, Emakku - எங்களுக்கு தானம் ஆக, Dhaanam Aaga - யாசகங் கொடுக்கும் விதமாக இன்று தம்மின், Indru Thammin - இப்போது கொடுத்து விடுங்கள், நீர், Neer - நீங்கள் எம்மை கொல்லாதே, Emmai Kollaadhe - எங்களைக் கொல்லாமல் கண்கள் ஆர, Kangal Aara - கண் படைத்த பயன் பெறுமாறு நின்று காணீர், Ninru Kaanir - நின்று காணுங்கோள் குன்றுபோல, Kuntrupola - நாங்கள் மலைமலையாக நின்று |