திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1872 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1872பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீங்கள் தான் எங்களைக் கொல்லுகிறது வெற்றிக்காக இறே – அத்தை உங்களுக்கு நாங்கள் தந்தோம்- நாங்களும் ஆண் பிள்ளைகள் என்று இருக்கிறது -துர்மானத்தாலே இறே- எங்களை நலிகிற துர்மானத்தை வேண்டோம்) 5
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக இன்று தம்மின் எங்கள் வாணாள் எம்பெருமான் தமர்காள் நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே குன்று போலே ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-5
பதவுரை Show / Hide
எம்பெருமான் தமர்காள், Emperumaan Thamarkaal - ஸ்ரீராமபக்தர்களான வாநர வீரர்களே! (- (குழமணிதூரம் ஆடுகின்றோம்))
வென்றி தந்தோம், Vendri Thandhom - ஜயத்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டோம்!
மானம் வேண்டாம், Maanam Vendaam - “நாங்களும் ஆண்பிள்ளைகள்” என்று கொண்டிருந்த அஹங்காரத்தைக் கைவிட்டிட்டோம்.
எங்கள் வாழ்நாள், Engal Vaazhnal - எங்களுடைய ஆயுளை
எமக்கு, Emakku - எங்களுக்கு
தானம் ஆக, Dhaanam Aaga - யாசகங் கொடுக்கும் விதமாக
இன்று தம்மின், Indru Thammin - இப்போது கொடுத்து விடுங்கள்,
நீர், Neer - நீங்கள்
எம்மை கொல்லாதே, Emmai Kollaadhe - எங்களைக் கொல்லாமல்
கண்கள் ஆர, Kangal Aara - கண் படைத்த பயன் பெறுமாறு
நின்று காணீர், Ninru Kaanir - நின்று காணுங்கோள்
குன்றுபோல, Kuntrupola - நாங்கள் மலைமலையாக நின்று