திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1873 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் – பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ – எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும்) 6 | கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து
வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா
கொல்ல வேண்டா ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-6 | பதவுரை Show / Hideஉங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்குத் தலைவரான ஸ்ரீராமபிரான், (- (வானர முதலிகான்!) (குழமணிதூரம் ஆடுகின்றோம் காண்)) கல்லில், Kallil - மலைகளைக்கொண்டு முந்நீர், Munnir - கடலை மாற்றி வந்து, Maatri Vandu - (அணைகட்டித்) தகைந்து இலங்கை, Ilankai - லங்கையிலுள்ள காவல், Kaaval - அரண்களையும் கடந்து, Kadandhu - அதிக்ரமித்து எம்மை, Emmai - எங்களை அமர் களத்து, Amar Kalathu - யுத்தபூமியிலே அல்லல் செய்தான், Allal Seithaan - மிகவும் துன்பங்களுக்கு ஆளாக்கினார் வெம் கதிரோன் சிறுவர், Vem Kathiron Siruvar - ஸூர்ய புத்திரனான ஸுக்ரீவனே! வெல்ல கில்லாது, Vella Killaadhu - (உங்களை) ஜயிக்க மாட்டாமல் அஞ்சினோ, Anjino - பயப்படுகின்றோம் கொல்ல வேண்டா, Kolla Venda - எங்களைக் கொல்லாதொழிய வேணும் |