திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1873 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1873பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூசல் களத்தில் வெல்ல மாட்டாமை அஞ்சினோம் – பராபி பவ ந சாமர்த்தியம் உடையவன் மகன் அன்றோ – எங்களைக் கொல்ல வேண்டா-கார்யம் கொள்ள அமையும்) 6
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்களத்து வெல்ல கில்லாது அஞ்சினோம் காண் வெங்கதிரோன் சிறுவா கொல்ல வேண்டா ஆடுகின்றோம் குழ மணி தூரமே –10-3-6
பதவுரை Show / Hide
உங்கள் கோமான், Ungal Gomaan - உங்களுக்குத் தலைவரான ஸ்ரீராமபிரான், (- (வானர முதலிகான்!) (குழமணிதூரம் ஆடுகின்றோம் காண்))
கல்லில், Kallil - மலைகளைக்கொண்டு
முந்நீர், Munnir - கடலை
மாற்றி வந்து, Maatri Vandu - (அணைகட்டித்) தகைந்து
இலங்கை, Ilankai - லங்கையிலுள்ள
காவல், Kaaval - அரண்களையும்
கடந்து, Kadandhu - அதிக்ரமித்து
எம்மை, Emmai - எங்களை
அமர் களத்து, Amar Kalathu - யுத்தபூமியிலே
அல்லல் செய்தான், Allal Seithaan - மிகவும் துன்பங்களுக்கு ஆளாக்கினார்
வெம் கதிரோன் சிறுவர், Vem Kathiron Siruvar - ஸூர்ய புத்திரனான ஸுக்ரீவனே!
வெல்ல கில்லாது, Vella Killaadhu - (உங்களை) ஜயிக்க மாட்டாமல்
அஞ்சினோ, Anjino - பயப்படுகின்றோம்
கொல்ல வேண்டா, Kolla Venda - எங்களைக் கொல்லாதொழிய வேணும்