திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1874 | பெரிய திருமொழி || (10-3–ஏத்துகின்றோம்) (குழமணி தூரம்) - (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய ஸ்ரீ திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய அவன் பக்கலிலே ப்ராவண்யம் –இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை – ஸ்ரீ திருவடியைச் சொன்னோம் ஆனால் ம்ருத்யு சத்ருசராய் இருப்பாரும் விலங்குவர்கள் போலே காணும்) 7 | மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண வாடீர் குழ மணி தூரமே –10-3-7 | பதவுரை Show / Hideஅரக்கர் உள்ளீர், Arakkar Ullir - ராக்ஷஸஜாதியிற் பிறந்திருக்கின்ற இலங்கையர்காள்! வம்மின், Vammin - நீங்களும் எங்களோடே வந்து சேருங்கள், மாற்றம் ஆவது இத்தனையே, Maatram Aavathu Ithanaiye - (உங்கட்கு நாங்கள்) சொல்லும் வார்த்தை இவ்வளவே, நும் மேல், Num Mel - உங்கள்மேல் சீற்றம், Seetram - (ஸ்ரீராம ஸைந்யங்களுக்குண்டான) கோபம் தீர வேண்டில், Theera Venda - தணிய வேண்டுமாகில் சேவகம் பேசாதே, Sevagam Pesadhe - (நீங்கள் இனியும்) மிடுக்குச் சொற்களைப் பேசுதல் தவிர்ந்து தொல் பிறப்பில் ஆற்றல் சான்ற அனுமானை, Thol Pirappil Aatral Sanra Anumaanai - அநாதிகாலமாக மிக்க வலிமையையுடையரான சிறிய திருவடிக்கு வாழ்க என்று, Vazhga Endru - பல்லாண்டு பாடிக்கொண்டு கூற்றம் அன்னார் காண, Kootram Annar Kaana - (நமக்கு) ம்ருத்யு போன்ற வானாலீரர்கள் காணும் படியாக குழமணிதூரம் ஆடீர், Kuzhamanithooram Aadeer - குழமணிதூரக்கூத்தை ஆடுங்கோள் |