| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 188 | பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - நரஸிம்ஹாவதாரம் முதலிய மற்றுமுள்ள விபவாவதாரங்கள் செய்தவனும் திருக்குடந்தை முதலிய திவ்ய தேசங்களில் வாழ்பவனும் இக் கண்ணபிரானே யென்பது இதில் விளங்கும். குடக்கூத்து – ப்ராஹ்மணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்கு வீடாக அவர்களாடுவதொரு கூத்து; இதனைத் தலையிலே அடுக்குங் குடமிருக்க இருதோள்களிலும் இருகுடங்களிருக்க இருகையிலுங் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து என்பர்; இதனைப் பதினோராடலிலொன்றெனறும் அறுவகைக் கூத்திலொன்றென்றுங் கூறி “குடத்தாடல் குன்றெடுத்தோனாடலலனுக் கடைக்குபவைந் துறுப் பாய்ந்து” என்று மேற்கோளுங்காட்டினர் சிலப்பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார். 7 | குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய் குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2-7-7 | குடங்கள், Kudangal - பல குடங்களை எடுத்து, Eduthu - தூக்கி ஏற விட்டு, Eera vittu - உயர்வெறிந்து கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை யாடுவதற்கு வல்ல, Valla - ஸாமர்த்தியமுடைய எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே மடம் கொள், Madam kol - மடப்பமென்ற குணத்தை யுடைய மதி முகத்தாரை, Mathi mugatharai - சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை மால் செய்ய வல்ல, Maal seiya valla - மயக்க வல்ல என் மைந்தா, En maindha - எனது புத்திரனே! முன், Mun - நரஸிம்ஹாவதாரத்திலே இரணியன் நெஞ்சை, Iraniyan nenjai - ஹிரண்யாஸுரனுடைய மார்பை இடந்திட்டு, Idandhittu - (திரு வுகிரால்) ஊன்ற வைத்து இரு பிளவு ஆக, Iru pilavu aaga - இரண்டு பிளவாகப் போம்படி தீண்டாய், Theendai - பிளந்தவனே! குடந்தை, Kudanthai - திருக் குடந்தையில் கிடந்த, Kidandha - பள்ளி கொள்ளுகிற எம் கோவே, Em kove - எமது தலைவனே! குருக்கத்திப் பூ சூட்டவாராய், Kurukkathi poo sootta vaaraay - குருக்கத்திப் பூ சூட்டவாராய் |