Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 188 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
188பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 7
குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -2-7-7
குடங்கள், Kudangal - பல குடங்களை
எடுத்து, Eduthu - தூக்கி
ஏற விட்டு, Eera vittu - உயர்வெறிந்து
கூத்து ஆட, Koothu aada - (இப்படி) குடக் கூத்தை யாடுவதற்கு
வல்ல, Valla - ஸாமர்த்தியமுடைய
எம் கோவே, Em kove - எம்முடைய தலைவனே
மடம் கொள், Madam kol - மடப்பமென்ற குணத்தை யுடைய
மதி முகத்தாரை, Mathi mugatharai - சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை
மால் செய்ய வல்ல, Maal seiya valla - மயக்க வல்ல
என் மைந்தா, En maindha - எனது புத்திரனே!
முன், Mun - நரஸிம்ஹாவதாரத்திலே
இரணியன் நெஞ்சை, Iraniyan nenjai - ஹிரண்யாஸுரனுடைய மார்பை
இடந்திட்டு, Idandhittu - (திரு வுகிரால்) ஊன்ற வைத்து
இரு பிளவு ஆக, Iru pilavu aaga - இரண்டு பிளவாகப் போம்படி
தீண்டாய், Theendai - பிளந்தவனே!
குடந்தை, Kudanthai - திருக் குடந்தையில்
கிடந்த, Kidandha - பள்ளி கொள்ளுகிற
எம் கோவே, Em kove - எமது தலைவனே!
குருக்கத்திப் பூ சூட்டவாராய், Kurukkathi poo sootta vaaraay - குருக்கத்திப் பூ சூட்டவாராய்