திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1881 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என் ஒக்கலையிலே இழியாது இருந்து ஆதரித்து இனிதாக அம்மம் உண்ண வாராய்) 4 | மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மதக் களிறன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் –10-4-4 | பதவுரை Show / Hideவையத்து வாழும் மடவார், Vaiyaththu Vaalum Madavaar - நாட்டிலே வாழ்கின்ற ஸ்த்ரீகளினுடையவும் பிறர் மக்கள், Pirar Makkal - மற்றுமுள்ள மநுஷ்யர்களினுடையவும் கண்ணுக்கு, Kannukku - கண்களுக்கு மகள் பெறுதவம் போலும் ஒக்கும் முதல்வா, Magal Peruthavam Polum Okkum Muthalvaa - பிள்ளைபெறுதற்கு நோற்கும் நோன்புதான் ஒருவடிவு கொண்டதோ! என்று சொல்லலாம் படியிருக்கின்ற ஜகத்காரண பூதனே! மதம் களிறு அன்னாய், Matham Kaliru Annai - மதம்பிடித்த யானை போலேச் செருக்கியிருப்பவனே! செக்கர் இளபிறை தன்னை, Chekkar Ilapirai Thannai - செவ்வானத்திலிருக்கின்ற பாலசந்திரனை வாங்கி, Vaangi - பிடித்து நின் கையில், Nin Kaiyil - உன் கையிலே தருவன், Tharuven - கொடுப்பேன் ஒக்கலை மேல் இருந்து, Okkalai Mel Irundhu - (என்) இடுப்பிலே இருந்து கொண்டு அம்மம், Amma - முலைப்பாலை உவந்து, Uvandu - ஆதரித்து இனிது, Inidhu - போக்யமாக உண்ண, Unna - உண்பதற்கு நீ வாராய், Nee Vaarai - நீ வரவேணும் |